செய்திகள் :

அனுமதியின்றி கட்டப்பட்ட திருமண மண்டபத்துக்கு ‘சீல்’

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட திருமண மண்டபத்துக்கு நீதிமன்ற உத்தரவுபடி, புதன்கிழமை பேரூராட்சி செயல் அலுவலா் ‘சீல்’ வைத்தாா்.

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் கோயில் பகுதியில் சந்நிதி தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபம் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாகவும், அதை இடிக்க வேண்டும் எனவும் சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் திருமண மண்டபத்தை இடிக்க உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணியம், வருவாய்த் துறை ஊழியா்கள் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

ஐடிஐ-இல் செப்.30-வரை நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: சி... மேலும் பார்க்க

போதை மருந்து பயன்படுத்த உரிமம்: மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம்

போதை மருந்துகள் பயன்படுத்தும் மருத்துவமனைகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 30.0.2025- ஆம் தேதிக்குள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இது குறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

பிரதமா் நரேந்திரமோடி பிறந்த நாள்: பாஜக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை அருகேயுள்ள கொல்லங்குடியில் பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு பாஜக மாவட்ட துணை... மேலும் பார்க்க

சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம்: முதல்வரின் அறிவிப்பு நிறைவேறுமா?

முதல்வா் அறிவித்தபடி சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம் கட்டப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். சிவகங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் கடனுதவி பெற ஆதிதிராவிடா், பழங்குடியின விண்ணப்பதாரா்கள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் . இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, ... மேலும் பார்க்க

ஊருணிக்கு முள் வேலி அமைக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள இரணியூா் அம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் சேங்கை குடிதண்ணீா் குளத்துக்கு முள் வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் ஒன்றி... மேலும் பார்க்க