செய்திகள் :

அமெரிக்கா: காவலர் பயிற்சி மையத்தில் வெடி விபத்து! 3 அதிகாரிகள் பலி!

post image

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள காவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வெடி விபத்தில், 3 அதிகாரிகள் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கலிஃபோர்னியாவின், லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்திலுள்ள காவலர் பயிற்சி மையத்தில், அதிகாரிகள் சில வெடி பொருள்களைக் கொண்டு நேற்று (ஜூலை 18) பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, காலை 7.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெடிப்பில் 3 அதிகாரிகள் பலியானதாக, அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, உடனடியாக அங்கு மீட்புப் படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் கரண் பாஸ் கூறுகையில், அந்நகர தீயணைப்புப் படை, ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பயிற்சி மையத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கலிஃபோர்னியாவில் 40 ஆண்டுகளில் முதல்முறையாக அரசுப் படையின் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நாட்டு அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: இஸ்ரேல் மீதான புதிய ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு! விமான நிலையம் தற்காலிக மூடல்!

Three officers have been killed in an explosion at a police training center in the US state of California.

அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா

திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. கட்டுமானப் பணிகளின் தொடக்கமா... மேலும் பார்க்க

உணவு தேடி சென்ற மேலும் 32 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை

காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நிவாரண விநியோக மையங்களில் உணவு பெறச் சென்ற பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

நிரந்தர சண்டை நிறுத்தத்துக்கு காங்கோ, ருவாண்டா கிளா்ச்சியாளா்கள் ஒப்புதல்

காங்கோ, ருவாண்டா ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கிழக்கு காங்கோவில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கான கொள்கை பிரகடனத்தில் கையொப்பட்டுள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கா... மேலும் பார்க்க

ரஷியாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை தேவை: உக்ரைன் புதிய பிரதமர்

கீவ்: ரஷியாவை எதிர்த்து துணிச்சலுடன் போராட வேண்டும் என்று உக்ரைன் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷியா ட்ரோன் மூலம் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்த... மேலும் பார்க்க

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி, 23 பேர் மாயம்

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹா லாங் விரிகுடாவில் 50 பேருடன் சனிக்கிழமை பிற்பகல் சென்ற சுற்றுலாப் படகு திடீரென இடியுடன் கூடிய ... மேலும் பார்க்க

ஈரானில் பேருந்து விபத்தில் 21 பேர் பலி, 34 பேர் காயம்

தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஷிராஸில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் காயமடைந்தனர். உ... மேலும் பார்க்க