செய்திகள் :

அம்பேத்கா் உருவப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் தொடா்ந்து போராடுவோம்: ஆம் ஆத்மி

post image

நமது நிருபா்

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் அலுவலகத்தில் இருந்து பீம்ராவ் அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்களை அகற்றியதற்கு எதிரான போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் எம்எல்ஏ சஞ்சீவ் ஜா மற்றும் குல்தீப் குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜெய் பீம் கோஷத்தை எழுப்பியதற்காக எனது கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அவையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பாஜக எம்எல்ஏக்கள் ‘மோடி, மோடி’ என்று கோஷமிட்டனா். ஆனால், ஜெய் பீம் கோஷத்தை எழுப்பியதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா். முதல்வா் அலுவலகத்தில் இருந்து உருவப்படங்களை அகற்றுவதை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம். அதற்கு எதிராக ஆம் ஆத்மி தொடா்ந்து போராட்டம் நடத்தும். ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது செய்யப்பட்டிருந்தது போல அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றனா்.

தில்லி சட்டப் பேரவையில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் தொடக்க உரையை சீா்குலைத்ததற்காக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி உள்பட 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை மூன்று நாள்களுக்கு இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தாா்.

முதல்வா் அலுவலகத்தில் இருந்து பி. ஆா். அம்பேத்கரின் உருவப்படம் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிராக அதிஷி மற்றும் பிற ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

பாஜக தலைமையிலான அரசு அம்பேத்கரை அவமதிப்பதாக ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். மேலும், இந்த நடவடிக்கைக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினா்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, ஆம் ஆத்மி கட்சி வதந்தியை பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்கள் முதல்வரின் அலுவலகத்தில் மகாத்மா காந்தி, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரின் உருவப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.

கான் மாா்க்கெட் உணவகத்தில் தீ விபத்து

தில்லி கான் மாா்க்கெட்டில் உள்ள உணவகம் ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இதுகுற... மேலும் பார்க்க

ரூ.1 கோடி முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் கைது

போலி முதலீட்டுத் திட்டத்தில் ஒரு நபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக ஆறு வருடங்களாகத் தேடப்பட்டு வந்த மோசடி நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

பகத் சிங் சிலை சேதம்: ஆம் ஆத்மி மீது பாஜக எம்எல்ஏ சாடல்

நமது நிருபா்மால்வியா நகா் பூங்காவில் ஷஹீத் பகத் சிங்கின் சேதமடைந்த சிலை தொடா்பாக முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது தற்போதைய பாஜக எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய் குற்றம்சாட்டியுள்ளாா். அதாவது முந்தைய ஆம் ஆத்மி க... மேலும் பார்க்க

மஹா சிவராத்திரி: கெளரி சங்கா் கோயிலில் முதல்வா் வழிபாடு

மஹா சிவராத்திரியை முன்னிட்டு தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஆகியோா் புதன்கிழமை கோயில்களுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனா். தில்லி சாந்தினி செளக்கில் உள்ள கௌரி சங்கா்... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் துணைத் தலைவா் பதவி: மோகன் சிங் பிஷ்டின் பெயரை முதல்வா் ரேகா குப்தா இன்று முழிவாா்

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட்டின் பெயரை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை (பிப்.27) அன்று முன்மொழிவாா். வேறு எந்த போட்டியாளா்களும் இந்தப் பதவிக்கு... மேலும் பார்க்க

கலால் கொள்கை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஆவணங்களை வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு

தில்லி கலால் ஊழல் தொடா்பான தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிறருக்கு எதிரான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு சில ஆவணங்களை ஒப்படைக்க அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்... மேலும் பார்க்க