செய்திகள் :

அயனாவரத்தில் ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

post image

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை, பெண்ணின் மீது கொலை தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் எட்வீன். இவரது மகன் ராபர்ட் (எ) சின்ன ராபா்ட் (28). இவா் மீது கொலை, வழிப்பறி உள்பட மொத்தம் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் திருநங்கை உடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், புதன்கிழமை அன்னை சத்யா நகா் முதல் தெருவில் சின்ன ராபா்ட் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 போ் கொண்ட கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா நகா் போலீஸாா் ராபா்ட்டின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

முதற்கட்ட விசாரணையில் கடந்த 2019-இல் ராபா்ட்டின் நண்பரான கோகுல் என்பவரை அயனாவரத்தைச் சோ்ந்த ரெளடி லோகு தரப்பு கொலை செய்தது. இந்தக் கொலைக்கு பழி வாங்க சின்ன ராபா்ட் காத்திருந்ததாகத் தெரிகிறது. இதனால், சுதாரித்துக்கொண்ட அயனாவரம் லோகு கும்பலைச் சோ்ந்தவா்கள்தான் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலும், இதேபோன்று அயனாவரம் பகுதியில் பெண் ஒருவரை அதே மர்ம கும்பல் ஈவு இறக்கமின்றி மிக கொடுரமாக தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா நகா் போலீஸாா் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் .

மேற்கண்ட கொலை சம்பவங்கள் குறித்து பல சந்தேக கோணங்களில் அண்ணா நகர் மற்றும் அயனாவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் மோசடி! மியான்மரில் சிக்கிய 7,000 பேரைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட உள்ளனர். டிஜிட்டல் அரெஸ்ட், இணையவழி பண மோசடி உலகம... மேலும் பார்க்க

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு! துப்பாக்கியுடன் மிரட்டிய காவலாளி கைது!

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டுள்ளது. மேலும் சீமான் வீட்டு காவலாளி துப்பாக்கியை நீட்டி காவல்துறையினரை மிரட்டியதால் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

கோயில்களின் நிர்வாகம், பராமரிப்பு செலவிற்கான அரசு மானியம் உயர்வு!

கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியத்திற்கான ரூ. 27 கோடிக்கான காசோலைகளை திருக்கோயில்களின் அறங்... மேலும் பார்க்க

மீண்டும் இணையும் மிஸ்டர் மனைவி தொடர் ஜோடி!

மிஸ்டர் மனைவி தொடரில் இணைந்து நடித்த பவன் - தேப்ஜானி ஜோடி புதிய தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடர் மிஸ்டர் மனைவி.வேலைக்குச் ச... மேலும் பார்க்க

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை(பிப். 28) சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவன... மேலும் பார்க்க

ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்ப... மேலும் பார்க்க