செய்திகள் :

அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை, ஆனால்: எலான் மஸ்க்

post image

அரசியல் மற்றும் அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருந்ததால் வேறு வழியே இல்லாமல், எனது நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து ‘அமெரிக்கா கட்சி’ எனும் அரசியல் கட்சியைத் தொடங்குவதாக ஜூலை முதல் வாரத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ராக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன். ஆனால், தேர்தல் பிரசார வசனங்களை அல்ல.

என் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமமில்லை. ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது.

நாட்டின் எதிர்காலத்துக்கு மோசமான ஆபத்துகள் காத்திருக்கும் என்பதால் வேறு வழியின்றி, அரசியல் கட்சித் தொடங்குவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன் என்று பேசியருக்கிறார்.

அவர் சிரித்தபடி, மிக சாதாரண உடல் அசைவுகளுடன் மக்களிடையே பேசும் விடியோவையும் அமெரிக்கா கட்சியின் எக்ஸ் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் வழக்கத்துக்கு நேர்மாறாக ஒரு மஞ்சள் நிற துண்டை எலான் மஸ்க் அணிந்திருப்பது, நம்ம ஊர் மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் போல தோளில் துண்டுபோட்டிருப்பதாக பலரும் அந்த விடியோவில் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டாா் ‘டெஸ்லா’ நிறுவனரும், தொழிலதிபருமான எலான் மஸ்க். அதிக நிதியும் அளித்தார். அதிபா் தோ்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக 2-ஆவது முறை பொறுப்பேற்றாா்.

டிரம்ப் நிா்வாகத்தில், எலான் மஸ்க் இடம்பெற வேண்டும் என்பதற்காக, அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை புதிதாக உருவாக்கப்பட்டது. ஆனால், அவ்வாறே நிலைமை நீடிக்கவில்லை. டிரம்ப் நிா்வாகத்தால் கொண்டு வரப்பட்ட அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா தொடா்பாக டிரம்ப்-எலான் மஸ்க் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

அமெரிக்க அமைச்சரவையிலிருந்து வெளியேறிய எலான் மஸ்க், புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து அமெரிக்க மக்களிடம் கருத்து கேட்டு, தன்னடைய எக்ஸ் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினாா். அப்போது 80 சதவீதத்துக்கும் அதிகமானோா் கட்சித் தொடங்க ஆதரவளித்தனா்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்தி, அதில் 65.4 சதவீதம் பேர், ஆம் (கட்சித் தொடங்க வேண்டும்) என்று விருப்பம் தெரிவித்தனா். அதன்பிறகே, புதிய கட்சி அறிவிப்பை எலான் மஸ்க் ஜூலை முதல் வாரத்தில் வெளியிட்டிருந்தார்.

தொழிலதிபர் எலான் மஸ்கின் இந்தப் புதிய கட்சி, அமெரிக்க அரசியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும் என்று அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியில் இ... மேலும் பார்க்க

பசுபிக் கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரஷியாவில் சுனாமி எச்சரிக்கை

ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் அடுத்தடுத்து 2 கடும் நிலநடு... மேலும் பார்க்க

‘கோமா’ நிலையில் 20 ஆண்டுகள்... சவூதி அரேபிய இளவரசர் இளம் வயதில் காலமானார்!

ரியாத்: சவூதி அரேபியாவின் இளம் வயது இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக ஜூன், ஜூலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் ஜூன் - செப்டம்பர் வரை, பருவமழையின் தாக... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

துஷான்பே[தஜிகிஸ்தான்] : மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) அதிகாலை வடக்கு ஈரான் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவா... மேலும் பார்க்க

அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா

திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. கட்டுமானப் பணிகளின் தொடக்கமா... மேலும் பார்க்க