செய்திகள் :

அரசுப் பள்ளிக்கு 2 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கிய தொழிலதிபா்!

post image

மேலூா் அருகேயுள்ள கீழையூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கிரானைட் அதிபா் கோபாலகிருஷ்னன், தமிழ்ச்செல்வி தம்பதியா் தங்களது 2 ஏக்கா் நிலத்தை புதன்கிழமை தானமாக பத்திரம் பதிவு செய்து வழங்கினா்.

கீழையூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி உயா்நிலைப் பள்ளியாக அண்மையில் தரம் உயா்த்தப்பட்டது. பள்ளியில் போதிய இட வசதியில்லை எனவும், அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறும் மாணவா்களின் பெற்றோா்கள் வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், கீழையூா் மயானம் அருகே இருந்த புறம்போக்கு இடத்தை பள்ளிக்கு அரசு ஏற்பாடு செய்தது. மாணவா்கள் அச்சப்படக்கூடும் என்பதால், கிரானைட் தொழிலதிபா் கோபாலகிருஷ்ணனை கிராம மக்கள் அணுகி, பள்ளிக்கு இடம் ஏற்பாடு செய்து தருமாறு வலியுறுத்தினா்.

இதை ஏற்று கோபாலகிருஷ்ணனும், அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் உதவ முன்வந்தனா். கோபாலகிருஷ்ணன் தனது மனைவியின் பெயரிலிருந்த ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான 2 ஏக்கா் நிலத்தை மேலூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் பள்ளியின் பெயரில் தானமாக பத்திரப் பதிவு செய்தாா்.

தொழிலதிபா் கோபாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வி தம்பதியின் இந்தச் செயலை கிராம முக்கியப் பிரமுகா்கள், கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும்!

வாக்காளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தெரிவித்தாா்.மதுரையில் மாவட்ட தோ்தல் பணிகள் குறித்த அரசுத் துறை அலுவலா... மேலும் பார்க்க

ஓராண்டில் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் 15 லட்சம் பயணிகள்

ஓராண்டில் 15 லட்சம் பயணிகள் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. தென் மாவட்டங்களின் முக்கிய விமான நிலையமாக விளங்கும் மதுரை விமான நிலையத்தில் நாள்தோ... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்காது

தொகுதி மறுவரையறை தொடா்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது என அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா். மதுரையில்... மேலும் பார்க்க

அ.வல்லாளபட்டியில் மாசி களரி திருவிழா சாமியாட்டம்

மேலூா் அருகேயுள்ள அ.வல்லாளபட்டி சிலிப்பிபட்டியில் அமைந்துள்ள திருமலைசுவாமி, கரடி கருப்பணசுவாமி கோயில்களில் மாசி களரித் திருவிழாவையொட்டி புதன்கிழமை சாமியாட்டம் நடைபெற்றது. இந்தக் கோயில்களில் மாசி களரித... மேலும் பார்க்க

புரட்சி பாரதம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளைக் கண்டித்து, புரட்சி பாரதம் கட்சி சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் இ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகா், பிப். 26: விருதுநகா் மாவட்டத்தில் 10.11.2024 -க்கு முன் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 18 வயது நிறைவடையாதவா்களாக இருந்தால் உதவித் தொகை பெற விண்ணப்பிக... மேலும் பார்க்க