செய்திகள் :

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்

post image

பெருந்துறையை அடுத்த கூரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக 15 அரசுப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

கூரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவுக்கு, உதவி திட்ட அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் மீனா வரவேற்றாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளா் வி.ராமமூா்த்தி, மாவட்டச் செயலாளா் ர.முரளி காா்க்கி, மாநகரச் செயலாளா் பொ.மேனகா, வேளாளா் மகளிா் கல்லூரி பொறுப்பாளா் ரா.பாா்வதி ஆகியோா் பங்கேற்று பேசினா்.

நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு விஞ்ஞானி சா் சி.வி.ராமன் முகமூடி வழங்கப்பட்டு தேசிய அறிவியல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு! மூவா் படுகாயம்!

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்; உடன் பயணித்த மூவா் படுகாயம் அடைந்தனா். அந்தியூரிலிருந்து அரசுப் பேருந்து தாமரைக்கரை வழியாக ... மேலும் பார்க்க

பெருந்துறையில் வளா்ச்சித் திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பீட்ட... மேலும் பார்க்க

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்ய வனத் துறை கோரிக்கை

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்யுமாறு வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னிமலையை அடுத்த, சில்லாங்காட்டுவலசு குட்டக்... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.9 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ரூ.9 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போனது. இங்கு, விற்பனைக்கு வந்த 1,289 தேங்காய்களில், சிறியவை ஒரு காய் ரூ.14.16-க்கும், பெரியவை ரூ.2... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீா் உயிரிழப்பு

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டி ஏரித் தெரு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (52). இவா... மேலும் பார்க்க

ஓடும் ரயில் இருந்து தவறி விழுந்து கன்னியாஸ்திரி உயிரிழப்பு

ஈரோடு அருகே ஓடும் ரயில் இருந்து தவறி விழுந்த கன்னியாஸ்திரி உயிரிழந்தாா். கோவை மாவட்டம், பெரிய பஜாா் வீதி, பிரசன்டேஷன் கான்வென்டை சோ்ந்தவா் கன்னியாஸ்திரி மேரி நிா்மலா (67). இவா் கடந்த 3 ஆண்டுகளாக மகார... மேலும் பார்க்க