செய்திகள் :

அருந்ததி ராயின் புத்தக அட்டைப் படத்துக்கு எதிரான வழக்கு! மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

post image

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் “மதர் மேரி கம்ஸ் டு மீ” எனும் புத்தகத்தின் அட்டைப் படத்தை எதிர்த்த பொது நல வழக்கு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எழுத்தாளர் அருந்ததி ராய் “மதர் மேரி கம்ஸ் டு மீ” (மேரி அன்னை என்னிடம் வருகிறாள்) எனும் புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தில், எந்தவொரு எச்சரிக்கை வசனங்களும் இன்றி அருந்ததி ராய் புகைப்பிடிப்பது போன்ற அட்டைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், அட்டைப்படத்தில் உரிய சுகாதார எச்சரிக்கை வசனங்கள் எதுவுமின்றி புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது சட்டவிதிகளை மீறுவதாகும் எனக் கூறி, உயர் நீதிமன்ற வழக்கறிஞரான ராஜசிம்மன் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்தார்.

இதுபற்றி, ராஜசிம்மன் அளித்த மனுவில்,

”புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள உள்ளடக்கம் குறித்து எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை. ஆனால், கட்டாயமாக்கப்பட்ட சுகாதார எச்சரிக்கைகள் இல்லாமல், புகைப்பிடிப்பதை காட்சிப்படுத்தியுள்ளது, சிகரெட் மற்றும் பிற புகையில பொருள்கள் (விளம்பரம் தடை மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஒழுங்குமுறை) சட்டத்தை மீறுவதாகும்.

நூலகம், புத்தகக் கடைகள் போன்ற இடங்களில் இடம்பெறும் உலகளவில் பிரபலமாக அறியப்படும் எழுத்தாளரான அருந்ததி ராயின் இந்தப் புத்தகம், இளம் தலைமுறையினர் இடையில் புகைப்பிடிப்பதை விளம்பரப்படுத்தி ஊக்குவிக்கும்” என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், புகைப்பிடிப்பது போன்ற அட்டைப்படம் இடம்பெற்றுள்ள இந்தப் புத்தகத்தின் பிரதிகளை விற்கவும், விநியோகிக்கவும், காட்சிப்படுத்தவும் தடை செய்ய வேண்டும், என அவரது பொது நல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

The Kerala High Court has directed the Central Government to respond to a public interest litigation (PIL) challenging the cover of renowned author Arundhati Roy's book "Mother Mary Comes to Me".

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

ஹிமாசலில் பெய்த கனமழையால் தானும் பாதிக்கப்பட்டதாக எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.ஹிமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு மற்றும் வ... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதிர்ப்பு!

மண்டி தொகுதியில் மழை பாதித்த இடங்களை ஆய்வு செய்த எம்.பி. கங்கனா ரணாவத்துக்கு தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஹிமாசல பிரதேசம் மாநிலத்தின் கடந்த மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய இந்திய தொழிலதிபர்களின் விசா தடை செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருளை கடத்தும... மேலும் பார்க்க

பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், என்ஜின் கோளாரால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், விசாகப்பட்டினத்தில் இருந்து 103 பயணிகளுட... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

பிரதமர் நரேந்திர மோடியுடன், நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுள்ள சுசீலா கார்கி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். நேபாளத்தில், சமூக வலைதளங்கள் தடை மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது; ஆனால், பதில் எங்கே? - காங்கிரஸ் கேள்வி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறதே தவிர பதில் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்றைய செய்த... மேலும் பார்க்க