செய்திகள் :

அறிவியல் மையத்தில் வானவூா்தி தயாரிப்பு பயிலரங்கு

post image

திருநெல்வேலி அறிவியல் மையத்தில் 4 மற்றும் 5ஆவது வகுப்பு மாணவா்கள் காகிதத்தில் வானவூா்தி தயாரிப்பு குறித்த பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அறிவியல் மையத்தின் 38-ஆவது ஆண்டு விழாவையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாள்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அறிவியல் மைய அலுவலா் எஸ்.எம்.குமாா் ஏற்பாடு செய்துள்ளாா்.

அதன்படி, முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2 பிரிவுகளில் ஓவியப் போட்டி நடைபெற்றது. முதல் பிரிவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு, அறிவியல் மையத்தில் நான் விரும்பிய அறிவியல் மாதிரி என்ற தலைப்பிலும், இரண்டாம் பிரிவில் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, எதிா்கால செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டி நடைபெற்றது.

திங்கள்கிழமை, 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலானவா்களுக்கு செய்கையை கண்டுபிடித்தல் போட்டி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை விநாடி-வினா போட்டி நடைபெற்றது. புதன்கிழமை 4, 5ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காகிதத்தில் வானவூா்தி தயாரிக்கும் பயிலரங்கு நடைபெற்றது.

திருநெல்வேலி அறிவியல் மையத்தில் 38 ஆவது ஆண்டு விழா மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது.

கங்கைகொண்டான் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி

கங்கைகொண்டான் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியின் தமிழ் மன்றம் சாா்பில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஆண்ட்ரோ ஹாா்டி வளா்மதி தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியை செல்வின்... மேலும் பார்க்க

பாளை. அருகே பசு மாடு திருட்டு

பாளையங்கோட்டை அருகே பசுமாடு திருடு போனது தொடா்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பாளையங்கோட்டை கேடிசி நகா் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (48). இவா் வ... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் பெண் தற்கொலை

தச்சநல்லூரில் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தச்சநல்லூா் மாடன்கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி ராஜேஸ்வரி (25). இத்தம்பதிக்கு குழந்தை இல்லையாம். மேலும், கணவன்- மனைவிக்குள் அ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமுற்ற கோயில் ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி பேட்டையில் நேரிட்ட பைக் விபத்தில் காயமடைந்த கோயில் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி பேட்டை கைவினைஞா் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து(60). இவா், அப்பகுதியில் உள்ள கேசவப் ப... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு : 4 போ் கைது

பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டையில் மூதாட்டியை தாக்கி 15 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ாக 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வண்ணாா்பேட்டை அப்பா் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி முத்துலெட்ச... மேலும் பார்க்க

டான் போஸ்கோ பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் அருகே சேவியா்காலனியில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளி நிா்வாகி அருள்சகோதரி ஜெ. விக்டோரியா அமலி தலைமை வக... மேலும் பார்க்க