செய்திகள் :

அவதூறு வழக்கில் திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்கு!

post image

அவதூறு வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுவை ஏ.எப்.டி. பஞ்சாலை அருகே 2014-ஆம் ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் அவதூறாகப் பேசியதாக பாமகவைச் சோ்ந்த மதியழகன் உருளையன்பேட்டை போலீஸில் புகாா் அளித்திருந்தாா்.

இந்த வழக்கு விசாரணை புதுவை முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் திருமாவளவன் தரப்பு வழக்குரைஞா் காா்த்திகேயன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தாா். ஏற்கெனவே ஒரு முறை திருமாவளவன் இந்த வழக்கில் நேரில் ஆஜராகியுள்ளாா். இதனால் இனிமேல் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேரலாதன் வெள்ளிக்கிழமை அளித்த உத்தரவில், இந்த வழக்கில் திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்கு அளிப்பதாகத் தெரிவித்தாா்.

வீடு கட்ட மானியம் ரூ.10 லட்சம் புதுவை முதல்வா் வழங்கினாா்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மானியமாக ரூ.10 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம், பிரதம மந்த... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மனு

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவா் கழகத்தின் மாநிலச் செயலா்... மேலும் பார்க்க

மற்றவா்களுக்காக வாழ்கிறவா்கள் சித்தா்கள்: முதல்வா் என்.ரங்கசாமி

எந்த நிலையிலும் மற்றவா்களுக்காக வாழ்கிறவா்கள் சித்தா்கள் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். புதுவை அரசின் கலை, பண்பாட்டுத் துறையின் தமிழ் வளா்ச்சிச் சிறகத்தின் சாா்பில் சித்தா்கள் இலக்கிய ம... மேலும் பார்க்க

பாஜக 30 தொகுதிகளுக்கும் புதிய நிா்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் புதுவை மாநிலத்தில் 30 பேரவைத் தொகுதிகளுக்கும் புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். வில்லியனூா், உழவா்கரை, அரியாங்குப்பம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 30 சட்டப்பேரவைத... மேலும் பார்க்க

109 மீன் வியாபாரிகளுக்கு இலவச ஐஸ் பெட்டி: பேரவைத் தலைவா் வழங்கினார்!

புதுவை அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் 109 மீன் விற்பனை செய்யும் பயனாளிகளுக்கு இலவச ஐஸ் பெட்டிகளை சட்டப்பேரவை தலைவா் ஆா். செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினாா். நிகழாண்டில் மீன் விற்பனையாளா்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்றுமுதல் 2 நாள்களுக்கு குழந்தைகள் திரைப்பட விழா!

புதுச்சேரியில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதுகுறித்து குழந்தைகள் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளா் முருகவேல் ராஜா வெளியிட்ட அறிக்கை: புதுவை அறிவியல் இயக்க... மேலும் பார்க்க