செய்திகள் :

ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனை! இந்தியாவில் எங்கு அமைய உள்ளது?

post image

ராஞ்சி: ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனையாக ’ரிம்ஸ்-2’ என்னும் திட்டம் அமையவுள்ளது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ‘ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம்(ரிம்ஸ்-2)’ அமையவுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக ரிம்ஸ்-2 அமையவுள்ளதால் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

ரிம்ஸ்-2 மருத்துவமனை திட்டமானது, நோயாளிகளுக்கென 2,600 படுக்கைகளுடன் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது. மருத்துவத்துறையின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரே வளாகமாகவும் இது திகழும். தில்லியின் ஃபரீதாபாத்தில் உள்ள ‘அமிர்தா’ மருத்துவமனை திட்டத்தைப் பின்பற்றி ரிம்ஸ்-2 அமையவுள்ளதாக ஜார்க்கண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் இர்ஃபான் அன்சாரி தெரிவித்திருக்கிறார்.

ரிம்ஸ் - 2 திட்டம் குறித்து, ஜார்க்கண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் பேசியிருப்பதாவது, “ரிம்ஸ் - 2 வெறும் மருத்துவமனை அல்ல. ஜார்க்கண்ட்டின் மருத்துவ அமைப்பை உலக தரத்துக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை. இத்திட்டம் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையின்கீழ் விரைவாக அமல்படுத்தப்படும். கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்த முடியாத திட்டத்தை இப்போது நனவாக்கவுள்ளோம். ஒட்டுமொத்த தேசத்துக்கும் புது தரத்திலானதொரு சுகாதார அமைப்பாக ‘ரிம்ஸ்-2’ மருத்துவமனை வருங்காலத்தில் அமையும்” என்றார்.

இத்திட்டத்திற்கான பெரும்பகுதி நிதியை ஆசிய வளர்ச்சி வங்கியிலிருந்து பெறப்படவுள்ளது. அதன்படி, ரூ. 1,000 கோடி நிதியுதவி பெறப்பட்டு இத்திட்டம் சாத்தியமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதிச் செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவடைந்த பின்னர், கிழக்கு இந்திய பகுதிகளுக்கான முக்கிய சுகாதார மையமாகவும், மருத்துவ சுற்றுலா தலமாகவும் ஜார்க்கண்ட் மாறுவது மட்டுமில்லாது, ஒட்டுமொத்த தேசத்துக்குமான மருத்துவ சுற்றுலா தலமாகவும் விளங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RIMS-2 project: After the completion of this project, Jharkhand will become the major healthcare hub and medical tourism destination not only of eastern India but of the entire country

செப். 3 முதல் ஓணம் கொண்டாட்டம்: கேரள அரசு அறிவிப்பு

கேரளத்தின் அறுவடை திருவிழாவான ஓணம் திருவிழாவை வரும் செப்டம்பா் 3-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் மாநில அரசு விமா்சையாக கொண்டாடும் என்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவ... மேலும் பார்க்க

மணிப்பூா்: குகி பழங்குடியினா் சாலை அமைப்பதை எதிா்த்து நாகா சமூகத்தினா் முழு அடைப்பு போராட்டம்

மணிப்பூரின் சுராசந்த்பூா் மற்றும் காங்போக்பி மாவட்டங்களை இணைத்து குகி பழங்குடியினா் ‘டைகா்’ சாலையை அமைத்து வருவதற்கு எதிராக மலை அடிவார பகுதி நாகா பழங்குடி கூட்டமைப்பினா் காலவரையற்ற முழு அடைப்பு போராட்... மேலும் பார்க்க

குஜராத் முதல்வா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

குஜராத் முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து குஜராத் மாநில போலீஸாா் மே... மேலும் பார்க்க

கொல்கத்தா ஐஐஎம் கல்வி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன்!

கொல்கத்தா: கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவன வளாகத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு இன்று(ஜூலை 19) ஜாமீன் வழங்கப்பட... மேலும் பார்க்க

மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு போராட்டம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்!

ஒடிஸாவில் மர்ம நபர்களல் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்ற தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. உயர்நிலை சிகிச்சைக்காக அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.ப... மேலும் பார்க்க

படேல் சமூகம் குறித்து சர்ச்சை கருத்து: மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!

அகமதாபாத்: படேல் சமூகத்தைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி ராஜ் தாக்கரே மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.என்.ஸ்.) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சர்... மேலும் பார்க்க