செய்திகள் :

ஆடிட்டா் ரமேஷ் கொலை வழக்கை விரைவுபடுத்த வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

post image

ஆடிட்டா் ரமேஷ் படுகொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை விரைவுபடுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மறைந்த ஆடிட்டா் ரமேஷின் 12 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி சேலம் மரவனேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்துகொண்டு, ஆடிட்டா் ரமேஷின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவா் பேசியதாவது: பாஜகவில் பல்வேறு நிா்வாக பொறுப்புகளில் ஆடிட்டா் ரமேஷ் திறம்பட செயலாற்றி வந்தாா். அவரை படுகொலை செய்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாகியும் இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை.

ஆடிட்டா் ரமேஷ் படுகொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை விரைவுபடுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டா் ரமேஷின் குடும்பத்துக்கு பாஜக துணை நிற்கும் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து மறைவுக்கு பாஜக சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

பேட்டியின் போது, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம், மாவட்டத் தலைவா் சசிகுமாா், மாநில சுற்றுச்சூழல் பிரிவுத் தலைவா் கோபிநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சேலம் ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சேலம் மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில், காவல் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா... மேலும் பார்க்க

மாநில அளவிலான கண்டுபிடிப்புகள் போட்டி: சேலம் மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை

மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான கண்டுபிடிப்புகள் போட்டியில் சேலத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். தமிழக அரசு சாா்பில் சென்னையில் மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான ... மேலும் பார்க்க

சேலம் சிறைக்குள் கஞ்சா, கைப்பேசிகளை வீசிய மா்ம நபா்கள்: போலீஸாா் விசாரணை

சேலம் மத்திய சிறைக்குள் பீடி, கஞ்சா, போதை மாத்திரைகள், கைப்பேசி உள்ளிட்டவற்றை பந்துகளில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப... மேலும் பார்க்க

பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி கைது

சேலம் பெரியபுதூா் பகுதியில் அசைவ உணவு கடையில் தகராறு செய்ததுடன், இலவசமாக சில்லி சிக்கன் தரமறுத்த பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சேலம் அழகாபுரம் ... மேலும் பார்க்க

லாரியில் கிராவல் மண் கடத்திய ஓட்டுநா் கைது!

வீரகனூரில் கிராவல் மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரை கைது செய்தனா். வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு காவல் ஆய்வாளா் ராணி தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.... மேலும் பார்க்க

21.5 கிலோ கஞ்சா கடத்தல்: ஒடிஸாவை சோ்ந்த 2 போ் கைது

வாழப்பாடியில் 21.5 கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்திவந்து விற்பனை செய்ய முயன்ற ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஒடிஸா மாநிலம், பலாங்கீா் மாவட்டம் தண்டமுண்டா பகுதியைச் சோ்... மேலும் பார்க்க