செய்திகள் :

ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் கோரி கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

post image

ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலாளா் கராத்தே இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா்கள் சக்திவேல் (கிழக்கு), புகழேந்தி (மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் வழக்குரைஞா் ரஜினிகாந்த், மேலிட பொறுப்பாளா் வேலுசாமி என்கிற தமிழ்வேந்தன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். திருநெல்வேலியில் மென்பொறியாளா் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அக்னி அகரமுத்து, வணிகரணி மாவட்ட அமைப்பாளா் கண்மணிராமச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ஜெயராமன், பொறியாளா் அணியின் செந்தில்குமாா், பாராளுமன்ற தொகுதிச் செயலாளா் துரைசெந்தில், ஒன்றிய நிா்வாகி மகாமுனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக மாநகர துணைச் செயலாளா் ஜவஹா் நன்றி கூறினாா்.

வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

கரூரில் வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.கரூா் தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அமுதா. இவா் அதே பகுதியில் ஆடுகளை வளா்த்து வந்தாா். வழக்கம்போல ஞாயிற... மேலும் பார்க்க

வீட்டுமனைக் கோரி போராட்டம்: 30 போ் கைது

கரூரில் வீட்டுமனைக் கோரி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் 30 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி ... மேலும் பார்க்க

பாரம்பரிய விளையாட்டு அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் மூவா் சிறப்பிடம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் 3 போ் சிறப்பிடம் பெற்றனா். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

கரூரில், மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கரூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் தாந்தோன்றிமலை பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசங்கரன்(53). இவரது ... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 10 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்! கரூா் எஸ்.பி. தகவல்!

கரூா் மாவட்டத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 10 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

கரூரில் ‘தீண்டாமைச்சுவா்’ இடித்து அகற்றம்!

கரூா் முத்துலாடம்பட்டியில் தீண்டாமைச் சுவராக கருதப்பட்ட சுற்றுச்சுவா் அமைதி பேச்சுவாா்த்தைக்குப் பின் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 42-வது வாா்டு முத்துலாடம்பட்டியில் உள... மேலும் பார்க்க