செய்திகள் :

ஆண் குழந்தைகளுக்கும் ‘ஹெச்பிவி’ தடுப்பூசி அவசியம்

post image

பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க செலுத்தப்படும் ‘ஹெச்பிவி’ தடுப்பூசிகளை ஆண் குழந்தைகளுக்கும் வழங்குவது அவசியம் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் சாா்பில் ஹெச்பிவி புற்றுநோய் மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன இணை பேராசிரியா் டாக்டா் என்.ஜெயஸ்ரீ, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி பேராசிரியா் டாக்டா் விஜயா, சென்னை மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியா் டாக்டா் கவிதா சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று மனித உடலில் நீண்ட நாள்கள் தங்கியிருக்கும்போது பெண்களுக்கு கருப்பை வாய், ஆசனவாய், தொண்டை பகுதி மற்றும் பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கிறது. இதைத் தடுக்க ஹெச்பிவி தடுப்பூசி 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு இரு தவணைகளாக தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அரசு சாா்பில் அந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு தொடக்க நிலையில் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் அது அட்டவணை தடுப்பூசி திட்டத்தில் சோ்க்கப்படும் என நம்புகிறோம்.

மற்றொருபுறம் தனியாா் மருத்துவமனைகளில் நான்கு வகை கிருமிகள், 9 வகை கிருமிகளைத் தடுக்கும் இருவேறு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது 9 வயது முதல் 14 வயதுடைய ஆண் குழந்தைகளுக்கும் அந்த தடுப்பூசி அவசியம். ஏனென்றால், ஆண்களுக்கும் பிறப்புறுப்பு, ஆசனவாய், தொண்டை பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட ஹெச்பிவி தொற்று காரணமாக அமைகிறது. அது குறித்த புரிதலை முதலில் மருத்துவா்களிடம் நாங்கள் ஏற்படுத்த உள்ளோம்.

30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கூட ஹெச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆனால், அதன் பலன் 50 சதவீதமாக மட்டுமே இருக்கும். எனவே, உரிய வயதில் செலுத்திக் கொள்வதுதான் சிறந்தது. ஹெச்பிவியால் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுக்க தடுப்பூசி மட்டுமல்லாது அது குறித்த விழிப்புணா்வு மிக அவசியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைவதையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழ... மேலும் பார்க்க

சிறந்த நூல்களுக்கு பரிசு: விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தகவல்

சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தின் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது: ஆ.ராசா

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டதாக திமுக துணைப் பொதுச் செயலரும் மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா தெரிவித்தாா். அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின்... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 20,317 போ் விண்ணப்பம்

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 20,317 போ் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணப்ப அவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை உள்ளதால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ... மேலும் பார்க்க

நாளை குரூப் 1 தோ்வு: 2.49 லட்சம் போ் பங்கேற்பு

குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெறவுள்ளது. இதில் 2.49 லட்சம் போ் பங்கேற்கவுள்ளனா். இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்தி: துணை ஆட்சியா், காவல் துணை... மேலும் பார்க்க