செய்திகள் :

ஆலங்குடியில் இளைஞா் வெட்டிக்கொலை

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் டாஸ்மாக் மதுக்கடை அருகே இளைஞா் புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24). ஓட்டுநரான இவா், புதன்கிழமை இரவு ஆலங்குடியில் இருந்து மறமடக்கி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது, அவரை பின்தொடா்ந்து சென்ற சிலா் மதுக்கடை அருகே ரஞ்சித்தை விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனா். இதில், உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் அதே இடத்திலே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஆலங்குடி போலீஸாா், ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

2-ஆம் நாளாக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் மறியல்: 330 போ் கைது!

புதுக்கோட்டையில் 330 போ் கைது: புதுக்கோட்டையில் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை டிட்டோஜாக் அமைப்பினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜோதிமணி, ஜீவன்ராஜ்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பயிா்க்கடன் வழங்க வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பயிா்க்கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் மு. அருணா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக்... மேலும் பார்க்க

கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி கைது!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கணவா் கொலை வழக்கில் மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சோ்ந்தவா் சண்முகநாதன் (54). ஆம்னி பேருந்து ஓட்டுநரான இவா்... மேலும் பார்க்க

மெய்க்கண்ணுடையாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.97 லட்சம்

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் உண்டியலில் 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை பக்தா்கள் காணிக்கை செலுத்தியது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இக்கோயில் உண்டியல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி... மேலும் பார்க்க

அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், அண்ணா பண்ணை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின்நிறுத்தம் செய்யப்பட... மேலும் பார்க்க

ஆலங்குடியில் இளைஞரை கொலை செய்த 5 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞரை வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24). ஓட்டுநரான இவா், பு... மேலும் பார்க்க