செய்திகள் :

ஆஸி. கிரிக்கெட் வாரியத்தில் உயர் பதவி! நடுவர் பதவியை ராஜிநாமா செய்தார் டேவிட் பூன்!

post image

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் ஆஸ்திரேய வீரர் டேவிட் பூனுக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், ஐசிசி நடுவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பெரிய மீசைக்கு பிரபலமானவரான 64 வயதான டேவிட் பூன் ஆஸ்திரேலிய அணிக்காக 107 டெஸ்ட் மற்றும் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்தத் தொடருக்குப் பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: கண்ணீருடன் இங்கிலாந்து வீரர்கள்..! வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான்!

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் மைக் பேர்ட் கூறுகையில், “டேவிட் கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி அவரின் அனுபவம் அணிக்கு மிக முக்கியப் பங்களிக்கும்” என்றார்.

1999 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற டேவிட் பூன், 2000 ஆம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகளாக அணித் தேர்வாளராக இருந்து வருகிறார். மேலும், 2011 ஆம் ஆண்டு ஐசிசியின் நடுவராக இணைந்தார்.

இவர் 2014 ஆம் ஆண்டு முதல் டாஸ்மேனியா கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநராகவும், 2022 ஆம் ஆண்டு முதல் தலைவராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய அணியுடன் இணைந்த பந்துவீச்சு பயிற்சியாளர்..! தீவிர பயிற்சியில் வீரர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலக இதுவே பிரதான காரணம்: மிட்செல் ஸ்டார்க்

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை இனி இப்படி கூற முடியாது; சச்சின் டெண்டுல்கர் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற... மேலும் பார்க்க

அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வாய்ப்பு யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அரையிறுதியில் இந்திய அணி யாருடன் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குரூப் - ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிற... மேலும் பார்க்க

வலைப் பயிற்சியைத் தவிர்த்த ரோஹித் சர்மா! கடைசிப் போட்டியில் விளையாடுவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா இன்று(பிப்.27) நடைபெற்ற வலைப் பயிற்சியில் ஈடுபடாததால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழு... மேலும் பார்க்க

மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி மொத்த ஆஸி.க்கு எதிராக திட்டமிருக்கிறது: ஆப்கன் கேப்டன்

கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிருப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நே... மேலும் பார்க்க

பக்குவமடைந்த தலைவன் ரோஹித் சர்மா..! மனம் திறந்த ஷிகர் தவான்!

முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, அவருடனான நட்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக ர... மேலும் பார்க்க