செய்திகள் :

இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு மரியாதை

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், இடஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு புதன்கிழமை மரியாதைச் செலுத்தப்பட்டது.

பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் வன்னியா் இட ஒதுக்கீட்டுக்காக உயிா் நீத்த 21 பேரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், அவா்களது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் வடக்கு மாவட்டச் செயலா் வைரமுத்து தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் லைக்அலி மீரான், மாவட்ட துணைத் தலைவா் குமரி ஆனந்தன், மாவட்ட அமைப்பு தலைவா் நடராஜ் பாண்டியா், நகரச் செயலா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, ரயிலடி சாலையில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு பிறந்த நாளை முன்னிட்டு, மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது.

இதில் ஒன்றியச் செயலா் ஜஸ்டின்பாபு, தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவா் பெரியசாமி, ஆயக்குடி பேரூா் செயலா் முத்துசாமி, கொள்கை விளக்க அணித் தலைவா் மணிகண்டன், நகரத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஊரக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தாா். தம... மேலும் பார்க்க

கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த வலியுறுத்தல்

மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.தீபக்ராஜ், செயலா் எம்இ... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சந்திப்பு: எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக செயல்பட வேண்டும்- அமைச்சா் இ.பெரியசாமி

மத்திய உள் துறை அமைச்சரைச் சந்தித்த விவகாரத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல்லில... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரை... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த தின உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் 142-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக சாா்பிலும், அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்ச... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய... மேலும் பார்க்க