செய்திகள் :

இந்தியாக் கூட்டணி: ``பாஜக-வுடன் நாங்கள் கூட்டணியா?" - காங்கிரஸை உலுக்கும் CPM-ன் சரமாரி கேள்விகள்

post image

இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அதேநேரம் விசிக தலைவர் திருமாவளவன் காங்கிரஸ் கட்சியின் மாநில அரசியலின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், சிபிஐஎம் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ. பேபி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், ``கேரள சட்டமன்றத் தேர்தலின் போது, சிபிஐ(எம்) மற்றும் பா.ஜ.க இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமையால் திட்டமிட்ட முறையில் பிரசாரம் செய்யப்பட்டது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

மேலும், சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமைக்குழு (Polit Bureau) உறுப்பினரும், அப்போதைய முதலமைச்சருமான தோழர் பினராயி விஜயன் மோடியுடன் உடன்பாடு செய்துகொண்டுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

'அப்படி இல்லை என்றால், அமலாக்கத்துறையால் (ED) அவர் ஏன் விசாரணை செய்யப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை?' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இவை தேர்தல் பிரசாரத்தின் ஆவேசத்தில் தற்செயலாகக் கூறப்பட்ட கருத்துக்கள் அல்ல, மாறாக உங்களது அரசியல் பிரசாரத்தின் மையப்பகுதியாக இருந்தன. தேசியத் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் நீங்கள் என அனைவரும் இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக முன்வைத்தீர்கள்.

பா.ஜ.க-வை அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பரந்த தளமாகவே 'இந்தியா' (INDIA) கூட்டணி உருவாக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் தேர்தல் ரீதியாகப் போட்டியாளர்களாக இருக்கும் பல்வேறு சித்தாந்தங்கள் மற்றும் திட்டங்களைக் கொண்ட கட்சிகள், இந்த ஒரே நோக்கத்திற்காக மட்டுமே ஒன்று கூடினன.

ஜூன் 2023 பாட்னா கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணி தொடங்கப்பட்டதில் இருந்தே, சிபிஐ(எம்) இத்தகையதொரு ஒருங்கிணைந்த தளம் உருவாவதற்காக உண்மையோடு உழைத்துள்ளது.

எம். ஏ. பேபி
எம். ஏ. பேபி

ஆனால் விந்தையாக, இப்போது சிபிஐ(எம்) பா.ஜ.க-வுடன் உடன்பாடு வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது எங்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாத ஒரு அவதூறு ஆகும். இது பா.ஜ.க-வுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒற்றுமையின் அடிப்படையையே தாக்குகிறது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டத்தில் கேரளாவில் எங்களது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தியாகம் செய்துள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கேரளாவில் கடந்த பத்து ஆண்டுகால எல்டிஎஃப் (LDF) ஆட்சியில், மற்ற பல மாநிலங்களைப் போலன்றி, எந்தவிதமான மதக்கலவரங்களும் நடக்கவில்லை என்பதையும், இது மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் எங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்புக்குச் சான்றாக அமைகிறது என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

லோக் சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்போதைய கேரள முதலமைச்சருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். இதை பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாடு என்று கூற முடியுமா அல்லது சக எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராகச் சட்டவிரோதமான தண்டனை நடவடிக்கையை எடுக்குமாறு மோடி அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பா?

இத்தகைய விஷயங்கள் தெளிவுபடுத்தப்படாவிட்டால், 'இந்தியா' கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாகிவிடும். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் என்ற முறையில், இத்தகைய சீர்குலைக்கும் நகர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்குவது நீங்களும் காங்கிரஸ் தலைமையும் எடுக்க வேண்டிய முடிவாகும்.

காங்கிரஸ் | மல்லிகார்ஜுன கார்கே - ராகுல் காந்தி
காங்கிரஸ் | மல்லிகார்ஜுன கார்கே - ராகுல் காந்தி

நேற்று கூட்டப்பட்டுள்ள கூட்டத்தின் பின்னணியில் இந்த விஷயத்தை எழுப்ப வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம்.

இருப்பினும், மோடி அரசாங்கத்தின் சர்வாதிகார, வகுப்புவாத மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க, 'இந்தியா' கூட்டணி மற்றும் இதர எதிர்க்கட்சிகளுடன் சிபிஐ(எம்) நாடாளுமன்றத்தில் முழுமையாக ஒத்துழைக்கும். அனைத்துத் தாக்குதல்கள் மற்றும் திரிபுகளையும் தாண்டி, இந்தப் பணியில் சிபிஐ(எம்) எப்போதும் பின்வாங்காது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நெல்லை: 'விஜய் படத்தின் கீழ் அமர மாட்டேன்!' - இருக்கையை இடமாற்றிய மேயர்

அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற் அரசாணை உள்ளது. ஆனாலும், திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்... மேலும் பார்க்க

'வெளிச்சம் டிவியை கட்டியெழுப்பியது யார்?' - சீண்டிக்கொள்ளும் சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார். விசிகவின் அதிகாரப்பூர்வ சேனலான 'வெளி... மேலும் பார்க்க

இஸ்ரேலின் முக்கிய நகரில் பிரமாண்ட சிவாஜி சிலை நிறுவப்படுகிறது! - பின்னணி என்ன?

இந்திய தலைநகர் புது டெல்லிக்கும் இஸ்ரேலின் டெல் அவிவ்விற்கும் இடையே வளர்ந்து வரும் கலாச்சார மற்றும் மூலோபாய உறவுகளின் ஒரு புதிய மைல்கல்லாக, இஸ்ரேலில் மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் திருவு... மேலும் பார்க்க

சேலம்: `ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார் தவெக MLA லட்சுமணன்' - தவெக அதியமான் கொளுத்திப் போட்ட பின்னணி?

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டவர் அதியமான். அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,539 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார். நம்பி வாக்களித்த மக்களுக்... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து - 'சிங்கப் பெண் அதிரடிப் படை' திட்டம் இன்று தொடக்கம் | Live Updates

இன்று சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்கம்தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று - சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம்.இந்தத் திட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு சென... மேலும் பார்க்க