செய்திகள் :

இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் எடுப்பது விமர்சிக்கத்தக்கதே: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி

post image

இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் இந்திய தூதரக அதிகாரி பதிலளித்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தில், பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் அசாம் நசீர் ``காஷ்மீரில் வசிக்கும் மக்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை, அவர்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஐ.நா.வின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் தொடர்ந்து மீறப்படுவதுடன், மனித உரிமைகளும் மீறப்படுகிறது. இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

இதனையடுத்து, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் பிரதிநிதியான க்ஷிதிஜ் தியாகி, காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. அவையில் மீண்டும் மீண்டும் எழுப்புவதற்காக பாகிஸ்தானை விமர்சித்தார்.

தொடர்ந்து, தியாகி கூறியதாவது ``பாகிஸ்தானின் ஆதாரமற்ற, போலியான இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதிக் கொடுக்கும் பொய்களை பரப்பும் பாகிஸ்தான் அதிகாரிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

இதையும் படிக்க:பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகின்றன: கார்கே

ஜம்மு - காஷ்மீரில் பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த பகுதிகளில், இயல்பு நிலையை கொண்டுவருவதற்காக, கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனநாயகம், முன்னேற்றத்தை உறுதி செய்வதில்தான் இந்தியா கவனம் செலுத்துகிறது.

ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானில்தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. அத்தகைய நாட்டினர் இந்தியாவுக்கு பாடம் எடுக்க அவசியம் இல்லை.

இந்தியா மீதான ஆதாரமற்ற கருத்துக்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது சொந்த மக்களுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச உதவிகளில் உயிர்வாழும் ஒரு தோல்வியுற்ற அரசு, இந்த ஐ.நா. அவையின் நேரத்தை, தொடர்ந்து வீணடிப்பது விமர்சிக்கத்தக்கதே’’ என்று பதிலளித்தார்.

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் கைது - வெடிகுண்டுகள் பறிமுதல்

சுக்மா : சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து வெடிகுண்டுகள், இதர வெடிபொருள்கள... மேலும் பார்க்க

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

மனிதக் கழிவுகளை கைகளால் அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடா்பாக தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மாநகர அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனு மீது உச்ச நீத... மேலும் பார்க்க

பேருந்தில் இளம்பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள்

புணே: மகராஷ்டிர மாநிலம், புணே பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள் மற... மேலும் பார்க்க

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை பாஜக போலியாகப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைத்தால் நமது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்: மத்திய அரசுக்கு காங். கண்டனம்

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைக்க மத்திய அரசு முயற்சிப்பது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபா் டொன... மேலும் பார்க்க

சுங்கத் துறை, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம்: உச்சநீதிமன்றம் உறுதி

சுங்கத் துறை மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளுக்கு கைது அதிகாரமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க