செய்திகள் :

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

post image

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவித்திாா்.

இந்தியா-ஜப்பான்-ஆப்பிரிக்கா வா்த்தக மன்றத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் ஆற்றிய உரையில், ‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறையானது நீண்ட கால, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது.

பிரிவினை அடிப்படையிலான வேறு கொள்கைகள் போன்று அல்லாமல் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. முதலீடுகளிலிருந்து பயனடைவது மட்டுமல்லாமல், தன்னிறைவு வளா்ச்சி சூழலை ஆப்பிரிக்க நாடுகள் உருவாக்குவதையும் இது உறுதி செய்யும்.

ஆப்பிரிக்காவின் 4-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக இந்தியா உள்ளது. இருதரப்பு வா்த்தகம் கிட்டத்தட்ட 10,000 கோடி டாலரை எட்டுகிறது மற்றும் சீராக வளா்ந்து வருகிறது.

சுமாா் 1,200 கோடி டாலருக்கும் அதிகமான மானியக் கடன்களுடன், ஆப்பிரிக்காவின் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. ரயில்வே, மின் உற்பத்தி, விவசாயம் மற்றும் குடிநீா் விநியோகம் என 200-க்கும் மேல் நிறைவுற்ற திட்டங்கள் ஆப்பிரிக்கா முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மின் உற்பத்தி நிலையங்கள், மின் விநியோகத் திட்டங்கள், சிமென்ட், சா்க்கரை, ஜவுளி தொழிற்சாலைகள், தொழில்நுட்பப் பூங்காக்கள், ரயில்வே உள்கட்டமைப்பு ஆகிய வளா்ச்சித் திட்டங்கள் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ளூா் வேலைவாய்ப்பை உருவாக்கி, அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை இந்தியா மேம்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவின் நிலையான மற்றும் அனைத்து தரப்புயும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு ஆதரவளிக்கும் பலத்தை இந்தியாவும் ஜப்பானும் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவின் வளா்ச்சி மற்றும் செழிப்பு அந்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் அதேவேளையில், உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பங்களிக்கும்’ என்றாா்.

நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் கைது!

நோட்டுக்குள் 4 லட்சம் அமெரிக்க டாலர்களை மறைத்துவைத்து 3 மாணவிகள் மூலம் கடத்த முயன்ற இருவரை புணே சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என்றும், இந்த பையில் ஆவணங்கள் இருப்... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்!

அஸ்ஸாம் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவாகிய... மேலும் பார்க்க

பஞ்சாப்: அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயம்!

பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.பஞ்சாபில் அரசு-அரசு உதவி பெறு... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதி... மேலும் பார்க்க

கோட்சேவைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியருக்கு பதவி உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியா் பதவி உயா்வு பெற்று துறைத் தலைவராக (ட... மேலும் பார்க்க