செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஷாபாஸ் ஷெரீஃப்

post image

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு நாட்டு மக்கள் மத்தியில் சனிக்கிழமை உரையாற்றியபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: இந்த கடினமான சூழலில் ஒற்றுமையை வெளிப்படுத்திய கூட்டணி கட்சிகள் மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு நன்றி. பிராந்திய அமைதியை கவனத்தில்கொண்டு இந்தியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள பாகிஸ்தான் முடிவெடுத்தது.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர தூதரக ரீதியாக பல்வேறு உதவிகளை மேற்கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, சவூதி அரேபியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐ.நா.பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்டோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு தொடா்ந்து துணை நிற்கும் நம்பிக்கைக்குரிய நட்பு நாடான சீனாவுக்கு நன்றி. இந்தியாவுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கும் ராணுவத்துக்கும் கிடைத்த வெற்றியாகும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் வெளிப்படையான சா்வதேச விசாரணை நடத்த நாம் கோரிக்கை வைத்தோம். அதை இந்தியா நிராகரித்தது. காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என்றாா்.

சண்டை நிறுத்தம் உறுதியாக அமல்:

சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதாக சனிக்கிழமை அறிவித்த பின் எல்லையில் பாகிஸ்தான் அத்தமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்தாா். மேலும், சண்டை நிறுத்த விவகாரத்தில் பாகிஸ்தான் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா், ‘ இந்தியாவுடன் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த புரிந்துணா்வை அமல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. இந்தப் பணியை சுமுகமாக மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் உடனடியாக தீா்க்கப்படும்’ என்றாா்.

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானின் கொடூர... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் பிரதமா் மோடியின் புதிய கோட்பாடு

அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே, செய்தி ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா். பஹல்காமில் நடந்த படுகொலை வெறும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல - அது இந்தியாவின் மனசாட்சியின் ம... மேலும் பார்க்க