செய்திகள் :

இந்திய அணியுடன் இணைந்த பந்துவீச்சு பயிற்சியாளர்..! தீவிர பயிற்சியில் வீரர்கள்!

post image

துபையில் உள்ள இந்திய அணியுடன் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் இணைந்தார்.

கடந்த பிப்.18ஆம் தேதி தந்தை மறைவால் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தாயகம் திரும்பினார்.

பயிற்சியாளர் இல்லாமலே இந்தியா அணி 2 போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டிய நால்வரும் நன்றாக பந்துவீசுவதால் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

துபைக்கு சென்றடைந்த மோர்னே மோர்கெல் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் நீண்ட நேரம் உரையாடினார்.

கில் தவிர மற்ற அனைவரும் பயிற்சி செய்தார்கள். ரிஷப் பந்த் உடல்நிலை குணமாகி பயிற்சிசெய்து வருகிறார்.

மார்ச்.2ஆம் தேதி நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவிருக்கிறது.

கடைசியாக இந்திய அணி 2013இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

இந்தியாவிற்கான போட்டிகள் அனைத்தும் துபையில் மட்டுமே நடைபெறுகின்றன. சுழல் பந்துக்கு சாதகமாக உள்ள திடல் இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளது.

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை இனி இப்படி கூற முடியாது; சச்சின் டெண்டுல்கர் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற... மேலும் பார்க்க

அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வாய்ப்பு யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அரையிறுதியில் இந்திய அணி யாருடன் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குரூப் - ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிற... மேலும் பார்க்க

வலைப் பயிற்சியைத் தவிர்த்த ரோஹித் சர்மா! கடைசிப் போட்டியில் விளையாடுவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா இன்று(பிப்.27) நடைபெற்ற வலைப் பயிற்சியில் ஈடுபடாததால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழு... மேலும் பார்க்க

மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி மொத்த ஆஸி.க்கு எதிராக திட்டமிருக்கிறது: ஆப்கன் கேப்டன்

கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிருப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நே... மேலும் பார்க்க

பக்குவமடைந்த தலைவன் ரோஹித் சர்மா..! மனம் திறந்த ஷிகர் தவான்!

முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, அவருடனான நட்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக ர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டி ரத்து: மழைக்கு 2-வது வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, நியூசிலாந்து ஆகி... மேலும் பார்க்க