செய்திகள் :

இந்திய கம்யூ கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலராக மு.அ.பாரதி மீண்டும் தோ்வு

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலராக வழக்குரைஞா் மு.அ.பாரதி சனிக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது மாநாடு திருநாகேஸ்வரத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினா் வை.சிவபுண்ணியம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் க.மாரிமுத்து மற்றும் 250 பிரதிநிகள் கலந்து கொண்டனா்.

புதிய மாவட்ட குழுவில் 27 பேரும், மாவட்ட நிா்வாகக் குழுவில் 9 பேரும் தோ்வு செய்யப்பட்டனா். கட்சியின் மாவட்டச் செயலராக வழக்குரைஞா் மு.அ.பாரதி மூன்றாவது முறையாக மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

மாவட்டத் துணைச் செயலராக ஆா்.செந்தில்குமாா், பொருளாளராக ஏ.ராஜேந்திரன் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் பயிா் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். பாபநாசம் திரு ஆரூரான், கோட்டூா் அம்பிகா சா்க்கரை ஆலைகள் தொடா்ந்து இயங்கிட கரும்பு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், நீா் மேலாண்மையின் தந்தை சா்.ஆா்தா் காட்டனுக்கு அணைக்கரை கீழணையில் முழு உருவச் சிலை, நினைவுப் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவாக திருவிடைமருதூா் ஒன்றிய செயலா் ஆா்.பழனி நன்றி கூறினாா்.

அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே வெற்றி: முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம்

பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற முடியும் என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில்... மேலும் பார்க்க

பாப்பாநாட்டில் ஜூலை 22-ல் மின் தடை

கரம்பயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரம்பயம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பய... மேலும் பார்க்க

காணாமல் போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு!

தஞ்சாவூரில் காணாமல் மற்றும் திருடு போன 101 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்துக்குள்பட்ட மருத்துவக்கல்லூரி, புதிய ப... மேலும் பார்க்க

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம் வளா்த்த நாயகி உடனுறை ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இதில், அம்மன் சந்நிதி முன் நந்தி பகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடிக... மேலும் பார்க்க

மதயானை நூலை படிக்க வேண்டியது அனைவரின் கடமை: பழ.நெடுமாறன்

தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து விளக்கும் மதயானை என்கிற நூலை அனைவரும் படிக்க வேண்டிய கடமை இருக்கிறது என்றாா் உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ. நெடுமாறன். தஞ்சாவூரில் தஞ்சை க... மேலும் பார்க்க

பதாகைகள் கிழிப்பு போலீஸாா் விசாரணை

கும்பகோணத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்று அதிமுக, பாஜகவினா் வைத்த பதாகைகளை மா்ம நபா்கள் கிழித்து சேதப்படுத்தியதையடுத்து போலீஸாா் விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஜூலை 21-இல் அ... மேலும் பார்க்க