செய்திகள் :

'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா!

post image

பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போடி நாளை நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இந்தப் போட்டியில் மோதவிருக்கின்றன. போட்டிக்கு முன்பாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, 'இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதிப்படுத்துவோம்!' என பேட் கம்மின்ஸ் பேசியதை போல லாராவும் பேசியது சுவாரஸ்யமான விஷயமாக இருந்தது.

Laura Wolvardt
Laura Wolvardt

லாரா பேசியதாவது, 'நாங்கள் நடந்து முடிந்த போட்டிகளையும் கடந்த காலத்தையும் பற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை. ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியும் அன்றைய நாளில் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறது என்றே நம்புகிறேன்.

எங்களின் எந்த வரலாற்றையும் இந்தப் போட்டிக்குள் திணிக்க விரும்பவில்லை. இந்த இறுதிப்போட்டியை ஒரு புதிய போட்டியாக புத்துணர்ச்சியோடு அணுகவே விரும்புகிறேன். இரு அணிகளின் மீதுமே பெரிய அழுத்தம் இருக்கிறது. எந்த அணியினர் அந்த அழுத்தத்தை நிதானமாக கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.' என்றார்.

India vs South Africa
India vs South Africa

தொடர்ந்து அவரிடம், 'பேட் கம்மின்ஸை போல உங்களுக்கும் இந்திய ரசிகர்களை அமைத்திப்படுத்திவிடுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?' என ஒரு பத்திரிகையாளர் கேட்க, அதற்கு, 'ஆம், நாங்கள் வெல்வோம் என நம்புகிறோம். எங்களின் வெற்றி இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்தும்!' என்றார்.

'திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டின் பொற்காலம்!' - உதயநிதி பெருமிதம்!

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்ட... மேலும் பார்க்க

உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் ... மேலும் பார்க்க

`எனது தாத்தா சொன்னார்' - இந்திய அணிக்கு விளையாட குடியுரிமையை சரண்டர் செய்த ஆஸி., கால்பந்து வீரர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அடிப்படையில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவார். வில்லியம்ஸ் குடும்பத்தினர் அவரது ... மேலும் பார்க்க

Ind v Aus: "இந்தியாவிடம் அடைந்த தோல்வி இன்னும் வலிக்கிறது"- ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹீலி

கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்... மேலும் பார்க்க

`RCB அணி விற்பனைக்கு.!’ - விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி - அணியின் மதிப்பு தெரியுமா?

ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த டி... மேலும் பார்க்க