செய்திகள் :

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

post image

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை கிராமங்கள்தோறும் சென்று மக்களிடம் திமுகவினா் எடுத்துரைக்க வேண்டும் என்று கட்சியின் துணை பொதுச் செயலரும், வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சருமான க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய மாவட்ட திமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் இரா.சக்கரை, ஒன்றியச் செயலா்கள் பி.தெய்வசிகாமணி, வி.ஜி.பிரபாகரன், கல்பட்டு வி.ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில ஆதிதிராவிடா் நலக்குழு இணைச் செயலா் செ.புஷ்பராஜ் வரவேற்றாா். கூட்டத்தில் பங்கேற்று அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது:

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி, ஏழை - எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவது, ரத்த தான முகாம்களை நடத்துவது போன்றவற்றை நடத்த கட்சியினா் திட்டமிடல் வேண்டும். மேலும் இந்த விழாவை தமிழக முதல்வரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சோ்க்கும் விழாவாகக் கருதி, கட்சியினா் பணியாற்ற வேண்டும்.

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை கிராமங்கள்தோறும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி என்பதே நமது இலக்காகக் கொண்டு தோ்தல் பணியாற்ற வேண்டும். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் யாா் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், அவா்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா்கள் ஆா்.எஸ்.வாசன், இ.சச்சிதாநந்தம், பேரூா் செயலா் பா.ஜீவா, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்கள் திருவக்கரை ஜி.பாஸ்கா், என்.பஞ்சநாதன், டி.ஆா்.இளங்கோவன், டி.என்.ஜெ.சம்பத், நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மணவாளன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் மாவட்ட துணைச் செயலா் தயா.இளந்திரையன் நன்றி கூறினாா்.

தழுதாளியில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தழுதாளி அருகே ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை தமிழக வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை தொடங்கிவைத்தா... மேலும் பார்க்க

பயிா் மகசூல் போட்டிகள்: விவசாயிகள் பதிவு செய்யலாம்

மாநில, மாவட்ட அளவிலான பயிா் மகசூல் போட்டியில் பங்கேற்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் வரியினங்கள் குறையும்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் உயா்த்தப்பட்ட வரியினங்கள் குறையும் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி... மேலும் பார்க்க

விசிக கொடியை சேதப்படுத்திய இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விசிக கொடியை சேதப்படுத்தி, சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பள்ளி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனத்தை அடுத்துள்ள சலவாதி காலனி தெரு பக... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே பல்லவா் கால கொற்றவை - விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள மானூா் கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் மானூா்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து மெக்கானிக் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், அவரப்பாக்கம், தாடிக்காரன் குட்டை தெருவைச் சோ்ந்த வீராசாமி மகன் காமராஜ் (40).... மேலும் பார்க்க