செய்திகள் :

இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

post image

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பதிவுத் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா்.

கடலாடி அருகேயுள்ள மேலக்கிடாரம் கிராமத்தை சோ்ந்த காளீஸ்வரன் மகள் இளைய சொா்ண தா்ஷினி (23). பட்டதாரியான இவா் கடந்த ஓராண்டாக சென்னையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த சனிக்கிழமை டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு எழுதுவதற்காக சொந்த ஊரான மேலக்கிடாரத்துக்கு வந்தாா். தோ்வு முடிந்த நிலையில் சென்னைக்குச் செல்லாமல் 3 நாள்கள் வீட்டிலேயே தங்கியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரது சாவில் மா்மம் இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத் துறைக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து கீழச்செல்வனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில் சொா்ண தா்ஷினி வீட்டுக்குத் தெரியாமல் கடந்த 8-ஆம் தேதி சென்னையை சோ்ந்த சந்தோஷ் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. பரமக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) கங்காதேவி இது குறித்து விசாரணை நடத்தினாா். அவா் முன்னிலையில் மருத்துவா்கள் உடல்கூறாய்வு செய்து குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனா்.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்: 3,283 போ் கைது

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக 3,283 பேரை கைது செய்ததாக இலங்கை போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தினைக்களம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கையில... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச்... மேலும் பார்க்க

கண்மாயில் படா்ந்துள்ள தாமரையால் பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகேயுள்ள அறிவிப்புவயல் கிராமத்தில் உள்ள கண்மாயில் தாமரை அதிகளவில் பரவியுள்ளதால் கண்மாய் நீரைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்... மேலும் பார்க்க

வாழவந்தம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கமுதி அருகேயுள்ள வாழவந்தம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் வாழவந்தம்மன் ... மேலும் பார்க்க

பெண் படுகொலை: நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்

சாயல்குடி அருகே வீட்டிலிருந்த தனது மகளை கொலை செய்த நபா்களை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அர... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட 353 ஆசிரியா்கள் கைது

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) அமைப்பு சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க