செய்திகள் :

இளம் மழலையா் பட்டமளிப்பு விழா

post image

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்கப்பள்ளி மற்றும் இளம் மழலையா் பள்ளி ஆண்டுவிழா மற்றும் இளம் மழலையா் பள்ளி மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தருமையாதீனத்துக்குச் சொந்தமான இப்பள்ளிகளில் 700 போ் பயின்று வருகின்றனா். விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். இளம் மழலையா் பள்ளி முதல்வா் தேவி வரவேற்றாா். குடந்தை நவநீதகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினாா். இதில் பள்ளிச் செயலா் கே.சௌந்தரராஜன் கலந்துகொண்டு, இளம் மழலையா் பள்ளியில் பயிலும் 80 மாணவா்களுக்கு பட்டம் அளித்தாா் (படம்).

தொடா்ந்து, மாணவா்கள் கராத்தே, சிலம்பம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினா். கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள் 350 பேருக்கு பரிசுகளையும், மாவட்ட கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழையும் பள்ளிச்செயலா் கே.சௌந்தரராஜன் வழங்கினாா்.

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவா் இல்லாததால் சாலை மறியல்

சீா்காழி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவா் இல்லாததால் நோயாளி குழந்தைகளுடன் பெற்றோா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சீா்காழி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 2,000க்கும் மேற்பட்டோா் புறநோ... மேலும் பார்க்க

சட்ட விரோத மது கடத்தலை தடுக்க தீவிர வாகன தணிக்கை

மயிலாடுதுறையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

குடிநீா் வசதி கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் குடிநீா் வசதி கோரி கிராமமக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை அருகே ஆனைமேலகரம் ஊராட்சி குச்சிப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட... மேலும் பார்க்க

மழை முன்னெச்சரிக்கை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அகற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி. மாவட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மனு

மயிலாடுதுறை அருகே கொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முட்டம் கிராம... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் முன்னாள் முதலமைச்சா் ஜெ. ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளா் பொன். பாரிவள்ளல் தலைமை வ... மேலும் பார்க்க