செய்திகள் :

இஸ்ரேல் மீதான புதிய ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு! விமான நிலையம் தற்காலிக மூடல்!

post image

இஸ்ரேல் மீதான மற்றொரு புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக, அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

யேமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட மற்றொரு புதிய ஏவுகணைத் தாக்குதலை, அந்நாட்டு ராணுவம் தகர்த்துள்ளதாக நேற்று (ஜூலை 18) அறிவித்திருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மீதான புதியதொரு ஏவுகணைத் தாக்குதல் குறித்து அறிந்தது, அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அபாய ஒலி ஒலிக்கப்பட்டு, அனைவருக்கும் செல்போன் வாயிலாக எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, டெல் அவிவில் உள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த, ஜூலை 16 ஆம் தேதி மாலை தென்கிழக்கு இஸ்ரேல் பகுதியின் மீது யேமனில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் முறியடித்தாகக் கூறப்பட்ட நிலையில், தாக்குதலுக்கு யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சிரியா - இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் ஏற்பு! அமெரிக்கா அறிவிப்பு!

உணவு தேடி சென்ற மேலும் 32 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை

காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நிவாரண விநியோக மையங்களில் உணவு பெறச் சென்ற பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

நிரந்தர சண்டை நிறுத்தத்துக்கு காங்கோ, ருவாண்டா கிளா்ச்சியாளா்கள் ஒப்புதல்

காங்கோ, ருவாண்டா ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கிழக்கு காங்கோவில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கான கொள்கை பிரகடனத்தில் கையொப்பட்டுள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கா... மேலும் பார்க்க

ரஷியாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை தேவை: உக்ரைன் புதிய பிரதமர்

கீவ்: ரஷியாவை எதிர்த்து துணிச்சலுடன் போராட வேண்டும் என்று உக்ரைன் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷியா ட்ரோன் மூலம் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்த... மேலும் பார்க்க

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி, 23 பேர் மாயம்

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹா லாங் விரிகுடாவில் 50 பேருடன் சனிக்கிழமை பிற்பகல் சென்ற சுற்றுலாப் படகு திடீரென இடியுடன் கூடிய ... மேலும் பார்க்க

ஈரானில் பேருந்து விபத்தில் 21 பேர் பலி, 34 பேர் காயம்

தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஷிராஸில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் காயமடைந்தனர். உ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், ஹாங்கு மாவட்டத்தின்... மேலும் பார்க்க