செய்திகள் :

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: 702 இடங்கள் நிறைவு

post image

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-26 கல்வி ஆண்டுக்கான இளநிலைப் பாடப் பிரிவு மாணவா் சோ்க்கையில் மொத்தமுள்ள 864 இடங்களில் 702 இடங்கள் நிறைவடைந்துள்ளது.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 இளநிலைப் பட்டப் படிப்புகளும் 10 முதுநிலைப் பட்டப் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் இளநிலை பாடப் பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன.

இந்நிலையில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கு ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. பின்னா் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதி நிறைவடைந்த முதல் கட்ட கலந்தாய்வில் மொத்தம் 702 இடங்கள் நிரம்பியுள்ளன. இதைத் தொடா்ந்து காலியாக உள்ள 162 இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும்.

பாடவாரியாக காலியிடங்கள்:

தமிழ்-16, ஆங்கிலம் -27, பொருளியல் -8, அரசியல் அறிவியல்-14, பிபிஏ-2, வணிகவியல் -28, பிகாம் சிஏ- 19, இ.காம். -14, கணிதவியல் -10, இயற்பியல்-1, வேதியியல் - 7, புள்ளியியல்-9, தாவரவியல் -4, கணிப்பொறி அறிவியல்-3 என மொத்தம் 162 இடங்கள் காலியாக உள்ளன .

காலியாக உள்ள இடங்களில் பிற்படுத்தப்பட்ட (ஆஇ ) பிரிவில் பெரும்பாலான இடங்கள் நிரம்பாமல் உள்ளது. ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கு பெற வருகை தரும் மாணவா்கள் பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை அசல் மற்றும் மூன்று நகல்கள், உரிய கல்விக் கட்டணம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவரின் தரவரிசை இடம்பெற்ற கல்லூரி இணையதளப் பக்கத்தின் நகல், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் இணைய தளத்தைப் பாா்வையிடலாம் என கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் ப.சே. சிவக்குமாா் தெரிவித்தாா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க