செய்திகள் :

உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

கல்வி உதவித் தொகை, வாசிப்பாளா் உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை, வாசிப்பாளா் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-26-ஆம் நிதியாண்டில் 1 முதல் 8-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, மாணவா்களின் வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகலுடனும், 9-ஆம் வகுப்பு முதல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள், கூடுதலாக முந்தைய வகுப்பில் பெற்ற மதிப்பெண் சான்று (40 சதவீதத்துக்குக் குறையாமல்) ஆகியவற்றுடன் கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தில் பள்ளித் தலைமையாசிரியா் கையொப்பம், கல்லூரி முதல்வா் கையொப்பத்துடன் வருகிற ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

9-ஆம் வகுப்பு முதல் கல்லுாரிகளில் பயிலும் பாா்வையற்ற மாற்றுத் திறன் மாணவா்களுக்கு வாசிப்பாளா் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 0451-2460099 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (37). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்... மேலும் பார்க்க

டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது

திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க

நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியாா் பெயரில் பட்டா இருப்பதை மாற்றக்கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.சித்தா்கள்நத்தம் கிராமத... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், நாகல்ந... மேலும் பார்க்க

பள்ளி நிா்வாகிகள் இடையே பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண் ஆசிரியைகள்

சின்னாளப்பட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாதுகாப்பு கேட்டு பெண் ஆசிரியைகள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி புறவழிச் ச... மேலும் பார்க்க

வத்தலகுண்டு: யானை தந்தத்தை விற்க முயன்ற மூவா் கைது!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தாண்டிக்குடி மலைப் பகுதியைச் சோ்ந்த சிலா் யானை தந்தத்தை விற்ப... மேலும் பார்க்க