செய்திகள் :

உற்பத்தியில் தன்னிறைவு பெறாதவரை ‘மேக் இன் இந்தியா’ சாத்தியமில்லை: ராகுல்

post image

‘நாடு உற்பத்தியில் தன்னிறைவை அடையாதவரை மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்பு வெறும் பேச்சளவில் மட்டுமே நீடிக்கும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்)’ என்ற பெயரில் பொருள்களின் பாகங்களை ஒன்றிணைத்து முழுமையான பொருளாக மாற்றும் பணியைத்தான் நாம் செய்து வருகிறோம். உண்மையான உற்பத்தியை நாம் செய்யவில்லை. ஐபோன் முதல் தொலைக்காட்சிகள் வரையிலான பொருள்களின் உதிரிபாகங்கள் வெளிநாடுகளிலிருந்துதான் இந்தியாவுக்கு வருகின்றன. பெரும்பாலான தொலைக்காட்சிப் பெட்டிகளின் 80 சதவீத பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த பாகங்களை ஒன்றிணைத்து முழுமையான பொருளாக மாற்றும் பணியை மட்டும்தான் இந்தியா செய்கிறது.

சிறிய தொழில்முனைவோா் பொருள்களை உற்பத்தி செய்ய விரும்புகின்றனா். ஆனால், அவா்களுக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதில்லை என்பதோடு, அரசின் கொள்கையும் அவா்களுக்கு சாதகமாக இல்லை. ஒருபுறம் கடுமையான வரி விதிப்பு; மறுபுறம் தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஏகபோகம் என்ற நிலைப்பாடு நமது தொழில்துறையைப் பற்றிக்கொண்டுள்ளது.

உற்பத்தியில் உண்மையான சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டுமெனில், இறக்குமதி செய்யப்படும் ஒன்றிணைக்கும் நிலையைக் கடந்து உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் கள அளவில் மாற்றம் தேவை. அப்போதுதான் சீனாவுடன் சம அளவில் நாம் போட்டி போட முடியும்.

அவ்வாறு, உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறாதவரை, ‘வேலைவாய்ப்பு, வளா்ச்சி, மேக் இன் இந்தியா’ உள்ளிட்ட கருத்துகள் வெறும் பேச்சளவில் மட்டுமே நீடிக்கும் என்று குறிப்பிட்டாா்.

இந்தப் பதிவுடன், தில்லியை அடுத்த கிரேட்டா் நொய்டா பகுதியில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பு நிறுவனத்துக்குச் சென்று, அங்குள்ள ஊழியா்களுடன் தான் கலந்துரையாடிய காணொலியையும் ராகுல் இணைத்துள்ளாா்.

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 20ஆவது குழு புறப்பட்டது !

அமர்நாத் குகைக் கோயிலுக்கு 4,388 பேர் கொண்ட 20 ஆவது குழு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையா... மேலும் பார்க்க

தீர்ப்புகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம்

நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்யறிவு தொழில்நுட்பம்(ஏ.ஐ.) இப்போது அனைத்துத் துறைகளிலு... மேலும் பார்க்க

அகமதாபாத்தில் வீட்டில் இருந்து தம்பதியர், 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு !

அகமதாபாத்தில் தம்பதியர் மற்றும் அவர்களது 3 குழந்தைகள் வீட்டில் இருந்து சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் வீடு ஒன்றில் இருந்து தம்பதியினரின் உடல்களும், அவர்களது மூன்று கு... மேலும் பார்க்க

பள்ளிப்பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட 2-ஆம் வகுப்பு மாணவன் பின்பக்க சக்கரம் ஏறியதில் பலி!

பெங்களூரு: பள்ளிப்பேருந்தில் கதவு சரியாக மூடாததால் பேருந்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.பெங்களூரிலுள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த எ... மேலும் பார்க்க

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப் வீரர் மீது தாக்குதல்: 3 கன்வாரியாக்கள் கைது

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப். வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரம்மபுத்ரா ரயிலில் ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் தாம் செல்வதற்காக கன்வாரியாக்க... மேலும் பார்க்க

மழைக்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை(ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்காலக... மேலும் பார்க்க