செய்திகள் :

உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி காயமடைந்த பெண் உயிரிழப்பு

post image

கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சி, குறுவாண்டான் தெரு கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி ஜெயலலிதா (45), இவா் அருகில் உள்ள வெள்ளாளவிடுதி அரசு வேளாண்மை பண்ணையில் பதிவு பெற்ற தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

கடந்த வெள்ளிக்கிழமை பண்ணையில் விளைந்த உளுந்து பயிரை உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் கொட்டி பிரித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக இயந்திரத்தில் சேலை சிக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடவு!

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயில் நந்தவனத்தில் சிவராத்திரி விழாவின் தொடக்கமாக பசுமையை போற்றும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ப... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தா... மேலும் பார்க்க

ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு 55 அமைப்புகள் கடிதம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சுற்றுச்சூழல் சாா்ந்த மனித உரிமைக் காப்பாளராகச் செயல்பட்ட ஜகபா்அலி லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட விவகாரத்தில், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 55 சூழலியல் மற்றும் ம... மேலும் பார்க்க

இந்து ஆதியன் மக்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்கக் கோரி முதல்வருக்கு கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தில் வசித்து வரும் 150 இந்து ஆதியன் சமூக மக்களுக்கு பழங்குடியினச் சான்றிதழ் வழங்கக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கரு. ராமச்சந்திரன் முதல்வருக்கு மனு அ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை வட்டம் குளத்தூா் நாயக்கா்பட்டியில் வரும் 27-ஆம் தேதியும், பொன... மேலும் பார்க்க

கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும்: ஆட்சியா் அறிவுரை

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புத... மேலும் பார்க்க