செய்திகள் :

"எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான், பிளவு கிடையாது" - இ.பி.எஸ் உடனான சமாதானம் பற்றி எஸ்.பி. வேலுமணி

post image

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றிருந்தது. அதிமுக 47 இடங்களை வென்றிருந்தது.

இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாகவும், மற்றவர்கள் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான இன்னொரு அணியாகவும் பிரிந்தனர். இதில் எஸ்.பி. வேலுமணி தரப்பு தவெக-விற்கும் ஆதரவளித்திருந்தது.

எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்
எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக-வின் இந்த இரு பிரிவிற்கும் இடையில் மோதல் நடந்து வந்தது.

எஸ்.பி.வேலுமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் தவெக-வில் இணைந்தனர். இன்று, எஸ்.பி. வேலுமணி தரப்பு இறங்கி வந்து எடப்பாடி பழனிசாமியை அவருடைய வீட்டில் சென்று சந்தித்து சமாதானம் ஆகினர்.

சமாதானம் ஆனது பற்றி பேட்டியளித்திருக்கும் வேலுமணி, "தகுதி நீக்கம் மனுவை இருவரும் கொடுத்திருந்தோம். அதனை வாபஸ் பெற்றிருக்கிறோம். எங்களுக்குள்ள கருத்து வேறுபாடுதான்.

அன்று முதல் எங்களுடைய பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார்தான் என சொல்லியிருந்தோம். அவரிடம் சில கோரிக்கைகளை வைத்திருந்தோம். ஒரு கட்சி என்றால் வெற்றி, தோல்வி சகஜம்தான்.

தோல்விக்கு பின்னிருக்கும் காரணங்களை ஆராய அவரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அதற்கென குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அதனை அவரும் ஒவ்வொன்றாக செய்வதாக சொல்லியிருக்கிறார். எங்களுக்குள் வெறும் கருத்து வேறுபாடுதான்.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

பிளவு கிடையாது. அதிமுக வலுவோடு செயல்படும். ஒற்றுமையாக நாங்கள் கட்சியை நடத்த வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.

அதிமுக பொன்விழா கண்ட கட்சி. இந்தக் கட்சி எங்களுடைய உயிர். பதவிக்காக ஆசைப்பட்டுதான் நாங்கள் இப்படி செய்தோம் என தவறான தகவல்கள் பரப்பட்டது.

தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருந்தது. அதிமுக அடுத்து வெற்றிகளை சந்திக்க வேண்டும். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. அதிமுக ஒன்றுகூடி விட்டது. கருத்துவேறுபாடு சரி செய்யப்பட்டது. சிவி சண்முகம் எங்களோடு இருக்கிறார்." எனப் பேசியிருக்கிறார்.

சொதப்பும் அரசு செயலிகள்... சரிசெய்யுமா விஜய்யின் புதிய அரசு?

புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. இளம் அமைச்சரவை அமைந்துள்ளது. இளைஞர்கள் பெருமளவு ஆதரவளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் இந்த அரசு இந்த மக்கள் பிரச்னைகளுக்கு இனி தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளைத் தரும... மேலும் பார்க்க

இந்தியாவிற்கு பெரிய பிரச்னை? நிர்மலா சீதாராமன் சொல்லும் மூன்று F-களை கவனிங்க - Detail

'இப்போ... அப்போ' என்று ஈரான் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தான் தொடர்ந்து அடிப்படுகிறதே தவிர, போர் நிறுத்தத்தின் அறிகுறிகள் எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை. இந்த ஈரான் போரால் உலக நாடுகள் அ... மேலும் பார்க்க

கேரளம்: 'அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை வீடியோவாகப் பதிவிட்டால் ரூ.5000 பரிசு' - 'Project Zero' திட்டம்

கேரள மாநிலத்தில் ஊழலை முற்றிலும் ஒழிக்க 'புராஜெக்ட் ஜீரோ' திட்டத்தை உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்தார். ஊழலின் அடையாளச் சங்கிலியை அறுத்து, புராஜெக்ட் ஜீரோ திட்டத்தை ரமேஷ் சென்னிதலா தொடங... மேலும் பார்க்க

கோவை: 'Master Command and Control Centre' - காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு மையம் | Photo Album

மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்ட... மேலும் பார்க்க

யார் அடுத்த சட்ட ஒழுங்கு டி.ஜி.பி?- 3 பேர் பட்டியல் ரெடி; முதல்வர் விஜய்-ன் கிரீன் சிக்னல் யாருக்கு?

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ... மேலும் பார்க்க

சிறு குறு, பெரு விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு! - யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்ப... மேலும் பார்க்க