செய்திகள் :

"என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆசைப்படுகிறேன்" - கண்ணனி நகர் கார்த்திகாவை பாராட்டிய சரத்குமார்

post image

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் ஃபைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன.

இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா சிறப்பாக விளையாடி அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இதேபோல் ஆண்கள் அணியில் இடம்பெற்ற திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸும் சிறப்பாக விளையாடியிருந்தார். தங்கம் வென்ற இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்.

அபினேஷ், கார்த்திகா

இதையடுத்து கபடியில் சாதித்த இருவருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, "கண்ணகி நகர் என்றால் எங்கும் வேலை கூட தர தயங்குவார்கள். எங்கள் கண்னகி நகரை குற்றங்கள் நடைபெறும் நகராக சித்தரித்து வைத்திருக்கிறார்கள். அந்த பிம்பத்தை உடைத்தெறிந்து என்னைப்போல பலர் சாதித்து வருகிறார்கள். எங்களுக்கு சரியாக வசதிகள் இல்லை.

அதை அரசு செய்துகொடுக்க வேண்டும். நான் கண்ணகி நகர் பெண் என்பதில் பெருமையடைகிறேன்" என்று கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா பேசியிருந்தது கவனம் ஈர்த்திருந்தது.

இந்நிலையில் கபடியை மையமாக வைத்து சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி கபடியில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசனின் வாழ்க்கையை 'பைசன்' திரைப்படமாக எடுத்த இயக்குநர் மாரிசெல்வராஜ், கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்துப் பாராட்டி ரூ.5 லட்சம் வழங்கினார். கண்ணகி நகர் மேம்பாட்டிற்கும் ரூ.5 லட்சம் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்துப் பாராட்டிய நடிகர் சரத்குமார், "விளையாட்டு என்றாலே எனக்கு ஒரு ஆர்வம் உண்டு. அதனாலேயே கார்த்திகாவை நேரில் வந்து பார்க்க ஆசைப்பட்டேன்.

திறமையான விளையாட்டு வீரர்களைப் பார்த்தால் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆசைப்படுவேன். கபடியில் முன்னேற கார்த்திகாவிற்கு என்ன வசதிகள், உபகரணங்கள் எல்லாம் வேண்டுமோ அதற்கான உதவியைச் செய்யத் தயாராகவிருக்கிறேன். கபடி நம் நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது" என்று பேசியிருக்கிறார்.

``விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை'' - கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா

தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த கபடி போட்டிகளில் காயமடைந்த 8 வீரர்கள் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களுக்கு நம்பிக்கை அளித்து உடல் நலனை விசாரிப்பதற்காக இந்திய மகளிர் ... மேலும் பார்க்க

IPL Retentions : சென்னை அணியில் சாம்சன்; வெளியேறியது யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதன்படி, சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

IPL Retentions : மீண்டுமொரு சீசனில் தோனி; CSK கூண்டோடு வெளியேற்றப்போகும் வீரர்கள்? - IPL அப்டேட்ஸ்!

ஐ.பி.எல் மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியுன் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். இதற்கான கெ... மேலும் பார்க்க

'திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டின் பொற்காலம்!' - உதயநிதி பெருமிதம்!

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்ட... மேலும் பார்க்க

உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் ... மேலும் பார்க்க