செய்திகள் :

``என் மரணத்துக்கு காரணம்..'' - நொய்டா பல்கலை. மாணவி கடிதம்; பேராசிரியர்கள் கைது.. என்ன நடந்தது?

post image

டெல்லி அருகில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் சார்தா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவி ஜோதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார். அதனை மாணவியுடன் தங்கி இருந்த தோழி கண்டுபிடித்து போலீஸாரிடம் கொடுத்தார்.

அக்கடிதத்தில் தனது தற்கொலைக்கு பேராசிரியர்கள் சாய்ரி, மகேந்திர சிங் ஆகியோர்தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

கைதான பேராசிரியர் மீது தாக்குதல்

இதையடுத்து மாணவி ஜோதியின் தந்தை ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் இரண்டு பேராசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

இது தவிர பல்கலைக்கழக டீன் உள்பட மேலும் 4 பேர் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

மாணவி தனது கடிதத்தில், இரண்டு பேராசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும், அவமானப்படுத்தியதாகவும், அவர்கள் சிறைக்குச் செல்லவேண்டும். அவர்கள் என்னை மனரீதியாக சித்ரவதை செய்தனர். அவர்கள் இரண்டு பேரால்தான் நான் நீண்டநாள்களாக மன அழுத்தத்தில் இருக்கிறேன்.

நான் அனுபவித்தது போன்ற ஒன்றை அவர்களும் அனுபவிக்கவேண்டும். என்னால் இந்த சூழ்நிலையில் மேற்கொண்டு வாழ முடியாது. எனது சாவுக்கு இரண்டு பேராசிரியர்களும்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி

தற்கொலைக்கு முன்பு மாணவியிடம் மூன்று பேர் உனது ப்ராஜெக்டுக்கு ஒப்புதல் கொடுக்கமாட்டோம் என்றும், உன்னை தேர்வு எழுதவிடமாட்டோம் என்று கூறி மிரட்டி இருக்கின்றனர்.

அதோடு அவர்கள் அளவுக்கு அதிகமாக புகார் செய்து வருவதால் நீ தண்டிக்கப்படவேண்டும் என்று மாணவியிடம் தெரிவித்துள்ளனர்.

மாணவி மன அழுத்ததில் இருப்பது குறித்து அவரது தந்தை பல்கலைக்கழக டீனை சந்தித்து பேசி இருந்தார். அப்போது மாணவிக்கு எந்த வித கெடுதலும் நடக்காது என்று டீன் சித்தார்த் உறுதியளித்துள்ளார். அப்படி இருந்தும் அடுத்து வந்த நாள்களில் மாணவி தொடர்ந்து துன்புறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை தடுப்பு மையம்

இன்ஸ்டாவில் பழகி, லிவ் இன் உறவில் இருந்த பெண் போலீஸை கொன்ற CRPF வீரர்.. என்ன நடந்தது?

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள அஞ்சார் போலீஸ் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அருணாபென். இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் திலீப் என்பவ... மேலும் பார்க்க

சிகிச்சையில் இருந்த மனைவியை மருத்துவமனைக்குள் புகுந்து குத்தி கொன்ற கணவர்; குளித்தலையில் கொடூரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ரூத். இவர், ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் ஸ்ருதி (வயது: 27) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள... மேலும் பார்க்க

நாமக்கல்: கடன் தொல்லையால் ரூ. 4 லட்சத்திற்கு கிட்னியை விற்ற பெண்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக ஏழை தொழிலாளிகளைக் குறிவைத்து சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கிட்னியை விற்பதாகப் புக... மேலும் பார்க்க

மும்பை ரயில் நிலையம்: பாலியல் உறவுக்கு மறுத்த பெண்; ரயிலில் தள்ளிக் கொன்ற நபர்; என்ன நடந்தது?

மும்பை ரயில் நிலையங்களில் பொதுவாகவே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மும்பை புறநகரில் உள்ள திவா ரயில் நிலையத்திலிருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ர... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: குழந்தைகள் கண் முன் தாய் வெட்டிக் கொலை; சாயல்குடி அருகே கொடூரம்; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க

``மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்'' - விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது: 54). இவர், விடுதலைச் சிறுதைகள் கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் ஓட்டுனராகவும் பணிபு... மேலும் பார்க்க