செய்திகள் :

எலான் மஸ்க் சொத்து மதிப்பில் 4வது கடும் சரிவு!

post image

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 22.2 பில்லியன் டாலர் (ரூ. 1.93 லட்சம் கோடி) சரிந்துள்ளது.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) பொறுப்பாளருமான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி, எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்த பிறகு தன்னுடைய சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

இதனிடையே எலான் மஸ்க் சொத்து மதிப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 8% அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததால், அவரின் சொத்து மதிப்பு சரிந்தது.

இதன்மூலம் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 22.2 பில்லியன் சரிந்து 358 பில்லியனாக உள்ளது.

அவருடைய செல்வத்திலிருந்து இவ்வளவு பெரிய இழப்பு ஏற்படுவது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னரும் இதே போன்ற இழப்புகளை எலான் மஸ்க் சந்தித்திருக்கிறார்.

இதுவரை 1 டிரில்லியன் மதிப்பிலான சொத்துகள் மஸ்க் வசமிருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | கும்பமேளா: லாபம் குவித்த 'இன்ஸ்டன்ட்' தொழில்கள்!

மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறதா இயற்கை? கடலின் விநோத நிகழ்வுகளால் குழப்பம்!

சமீபகாலமாக பெருங்கடல் பகுதிகளில் நிகழும் அசாதாரணமான நிகழ்வுகளால் மனிதர்களை கடல் எச்சரிக்கிறதா என்ற சந்தேகம் பலரிடையே தோன்றியுள்ளது. சூரிய வெளிச்சத்தையே அறியாத வகையில் பெருங்கடல்களின் ஆழ்பகுதியில் வாழு... மேலும் பார்க்க

கனிம வளங்கள் பயன்பாடு: உக்ரைனுடன் பிரான்ஸ் பேச்சுவார்த்தை!

ராணுவப் பயன்பாட்டுக்கு உக்ரைன் நாட்டின் கனிம வளங்களைப் பயன்படுத்த பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.உக்ரைன் நாட்டின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் வகையில் பொருளாதார ஒப்பந்த வரை... மேலும் பார்க்க

பணியாளர்களை குறைக்க அரசுத் துறைகளுக்கு கெடு விதித்த டிரம்ப்!

அரசுத் துறைகளில் அதிகளவிலான பணியாளர்களை குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டிரம்ப், அரசின் செலவீனங்களை குறைக்க பல்வேறு முக்கிய முடிவுகள... மேலும் பார்க்க

வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

வடகொரியா நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.கரோனா பெருந்தொற்று காலத்தில் வடகொரியா நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத்... மேலும் பார்க்க

எம்ஹெச்370 விமானம்: மீண்டும் தொடங்கிய தேடுதல் வேட்டை

இந்தியப் பெருங்கடல் பகுதியில் மா்மமான முறையில் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தைத் தேடும் பணிகள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்... மேலும் பார்க்க

4 பிணைக் கைதிகளின் சடலங்கள் இன்று ஒப்படைப்பு: ஹமாஸ்

இஸ்ரேலில் இருந்து கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட மேலும் நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை வியாழக்கிழமை (பிப். 27) திரும்ப ஒப்படைக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா். இது ... மேலும் பார்க்க