செய்திகள் :

ஏர் இந்தியா விபத்து: என்ன நடந்தது தெரியுமா? - அமெரிக்க விசாரணை அமைப்பின் தகவல்கள்

post image

அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த விமான விபத்து விசாரணை அமைப்பான ’என்.டி.எஸ்.பி.’ பதிவிட்டுள்ளது.

அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ‘ஏஐ-171’ விபத்துக்குள்ளானதில் 270-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயின.

இந்தநிலையில், விபத்துக்குள்ளான விமானம் நடுவானுக்கு பறக்க முற்படும்போது, திடீரென இன்ஜின்களுக்கு பாயும் எரிபொருள் தடைபட்டது ஏன்? என்பதை ஆய்வு செய்து வருவதால் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இiது குறித்து, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்(என்.டி.எஸ்.பி.) தலைவர் ஜெனிஃபெர் ஹோமெண்டி தெரிவித்திருப்பதாவது, “இதுபோன்ற பெரும் விமான விபத்தில் உண்மையில் நடந்தது என்ன? என்பதை கண்டறிய, நிச்சயம் கால அவகாசம் கூடுதலாக தேவைப்படும்.

ஏர் இந்தியா விபத்து குறித்து அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள், ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டிருப்பவையே.

இப்போதே, ’விபத்துக்கு இதுதான் காரணம்’ என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்” என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக, இதே கருத்தையே ஏர் இந்தியா தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சனும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு(ஏ.ஏ.ஐ.பி.)யும் வலியுறுத்தியுள்ளனர்.

ஏ.ஏ.ஐ.பி.யின் முதல்கட்ட விசாரணை அறிக்கையின்படி, ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே... விமானத்திலுள்ள கட்டுப்பாட்டு ஸ்விட்சுகள் இரண்டும் ‘ஸ்விட்ச்-ஆஃப்’ நிலைக்கு அமுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை உடனடியாக கவனித்த விமானி, அந்த ஸ்விட்சுகளை மீண்டும் ’ஸ்விட்ச்-ஆன்’ நிலைக்கு தள்ளிவிட்டார். ஆனால், அதற்குள் விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்ஜின்களுக்கு எரிபொருள் பாய்வது தடைபட்டிருப்பதுடன், விமானம் மேலே பறக்க முடியாமல் விழுந்துள்ளது.

விமானி அறையினுள் உள்ள ஒலிப்பதிவு செய்யும் கருவியில்(காக்பிட் டிவைஸ்), விபத்துக்கு முன் விமானிகள் இருவரும் பேசிக்கொண்டவை பதிவாகியுள்ளன.

அதில், முதல்நிலை அதிகாரியான பைலட் க்ளைவ் குந்தர் விமானத்தின் கேப்டன் சுமீத் சபர்வாலிடம் ‘ஏன் அந்த ஸ்விட்சுகளை கீழே அமுக்கி விட்டுருக்கிறீர்கள்?’ என்று வினவியுள்ளார். அதற்கு அந்த கேப்டன் ‘நான் அப்படிச் செய்யவில்லையே’ என்று பதிலளித்திருக்கிறார்.

இந்தநிலையில், விபத்து குறித்து விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள், அந்த ஸ்விட்சுகள் எப்படி ’ஸ்விட்-ஆஃப்’ நிலைக்கு சென்றன. இதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமா? அல்லது மனித தவறா? அல்லது வேறு காரணங்களா? என்று பல கோணங்களிலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்த விரிவான விசாரணை அறிக்கை வெளியாக ஓராண்டு காலம் அல்லது அதற்கும் மேல் ஆகக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

Ahmedabad Air India crash: The head of the US National Transportation Safety Board (NTSB) has cautioned against premature conclusions in the investigation into the deadly crash of Air India Flight 171

‘நயாரா’ நிறுவனம் மீதான ஐரோப்பிய யூனியனின் தடைகள் சட்ட விரோதம்: ரஷியா கண்டனம்

‘இந்தியாவில் செயல்படும் தனது நயாரா எனா்ஜி நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நியாயமற்றவை மற்றும் சட்ட விரோதமானவை’ என்று ரஷிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனம... மேலும் பார்க்க

இஸ்கான் சைவ உணவகத்தில் இறைச்சி உண்ட இளைஞருக்கு குவியும் கண்டம்! வைரல் விடியோ!

லண்டனில் செயல்பட்டுவரும் இந்து மதத்தைச் சேர்ந்த இஸ்கான் சைவ உணவகத்தில் இளைஞர் ஒருவர், இறைச்சி உண்ணும் விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இஸ்கான் என்னும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க... மேலும் பார்க்க

உ.பி.யில் சைவ உணவு மட்டுமே வழங்கும் கே.எஃப்.சி.! காரணம் என்ன?

உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் உள்ள பன்னாட்டு உணவு நிறுவனமான கே.எஃப்.சியில் தற்காலிகமாக சைவ உணவுகளை மட்டுமே விற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்து மதத்தைச் சேர்ந்த துறவிகள் கன்வர் யாத்திரை செல்லும் ... மேலும் பார்க்க

கிர்ப்டோ பணப் பரிமாற்ற நிறுவனம் முடக்கம்: வாடிக்கையாளர்கள் நிலை என்ன?

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் முன்னணி நிறுவனமான காயின் டி.சி.எக்ஸ். மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.கடந்த 19ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தால், இந்த தளத்திலிருந்து 44 மில்லியன் டாலர்கள் (ரூ... மேலும் பார்க்க

ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள்!

ஹிமாசலப் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். மணப்பெண்ணும் முழு சம்மதத்துடன் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் இருவரை திருமணம் செய்துகொண்டார். கிராம மக்கள் முன்னிலையில்... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கியதில் பலி !

மத்தியப் பிரதேசத்தில் மீன்படிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் டோரியா டெக்கிற்கு அருகிலுள்ள கென் ஆற்றில் பாயும் ஓட... மேலும் பார்க்க