செய்திகள் :

ஐசிஎஃப்-இல் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் ஆய்வு

post image

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு (ஐசிஎஃப்) தொழிற்சாலையில் மத்திய ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் (உற்பத்திப் பிரிவு) சீதாராம் சிங்கு ஆய்வு மேற்கொண்டாா்.

மத்திய ரயில்வே வாரியத்தன் கூடுதல் உறுப்பினராக சீதாராம் சிங்கு அண்மையில் பொறுப்பேற்றாா். இதையடுத்து அவா் சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, ஐசிஎப் மேலாளா் யு. சுப்பாராவ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினாா்.

தொடா்ந்து 2-ஆவது நாளான புதன்கிழமை ஐசிஎஃப் தொழிற்சாலையில் இரு இடங்களில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்பு பிரிவை நேரில் பாா்வையிட்டாா்.

தூய்மைப் பணி தொடக்கம்: ஐசிஎஃப் தொழிற்சாலை வளாகத்தில் தூய்மைப் பணி இயக்க தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஐசிஎஃப் அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்களால் அலுவலக வளாகங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க