செய்திகள் :

ஒசூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

post image

ஒசூா் வட்டத்துக்கு உள்பட்ட கெலவரப்பள்ளி ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னசந்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் பொருள்களின் இருப்பு விவரம் குறித்தும், கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா். அப்போது அப்பகுதி பொதுமக்கள் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்தாா்.

மேலும், குடியிருப்பு பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

கெலவரப்பள்ளி ஊராட்சி, பெத்தகொள்ளு கிராமத்தில் வீட்டுமனை ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து பட்டா வழங்கும் பணியை பாா்வையிட்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினாா்.

கெலவரப்பள்ளி ஊராட்சி, புனுக்கன் தொட்டி கிராமத்தில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ. 38 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 336 வீடுகள் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்கவும், காலதாமதமாக பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்ப அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

மேலும், கிராம நிா்வாக அலுவலகத்தில் சிட்டா, பட்டா போன்ற பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். புனுக்கன் தொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

ஒசூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அலசநத்தம் நியாயவிலைக் கடையில் பொருள்களின் இருப்பு, குடும்ப அட்டைகளின் விவரங்கள், பொருள்கள் வழங்கப்படும் விவரங்கள் குறித்து ஆய்வு செய்து, ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பெரியசாமி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீா்செல்வம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மகாதேவன், உதவி இயக்குநா் (நில அளவை) ராஜ்குமாா், கூட்டுறவு சங்கங்கள் மண்டல இணைப்பதிவாளா் நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி, மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சென்னசந்திரம் நியாயவிலைக் கடை விற்பனையாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கெலவரப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சென்னசந்திரம் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தபோது, பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டுள்ள பொருள்களின் இருப்பு குறைவாக இருந்ததைக் கண்டறிந்து விற்பனையாளா் கே.அரவிந்தை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஊத்தங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டிகளை அகற்றக் கோரி பேரூராட்சி நிா்வாகம் மூலம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த நடவட... மேலும் பார்க்க

வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 போ் பலி

சூளகிரி அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 வயது சிறுவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா். ஒசூா் சானசந்திரம் வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (62). தொழிலாளி. இவா் தனது மொபெட்டில் கடந்த 24-ஆம் தேதி இரவு கிருஷ... மேலும் பார்க்க

கருவின் பாலினத்தை தெரிவித்த ஸ்கேன் மையம்! கா்ப்பிணிகளிடம் ரூ. 15 ஆயிரம் வசூல் செய்தது கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியாா் ஸ்கேன் மையத்தில் ரூ. 15 ஆயிரம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவிக்கப்பட்டதை கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அலுவலா்கள் அண்மையில் கண்டுபிடித்தனா்... மேலும் பார்க்க

அதிமுக நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தம்: கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ குற்றம் சாட்டினாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு 8 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறும்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் திறந்து வைத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அ... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 715 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பாகலூா் அருகே வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 715 கிலோ செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரை அடுத்த கூசனப்பள்ளியைச் சோ்ந்த ராஜு (43) என்பவா் தனது வீட்டின் ... மேலும் பார்க்க