செய்திகள் :

ஒபாமா - மிச்சல் விவாகரத்தா? ஒன்றாகத் தோன்றி உறுதி செய்த தம்பதி!

post image

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா - அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் விவாகாரத்துப் பெறப்போவதாக எழுந்தது உண்மையில்லை, புரளி என்று இருவரும் ஒன்றாகத் தோன்றி உறுதி செய்துள்ளனர்.

சில நாள்களாக பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்காத நிலையில், இந்த விவாகரத்துப் புரளி விஸ்வரூபம் எடுத்திருந்தது.

இந்த நிலையில்தான், மிச்சல் ஒபாமா தன்னுடைய சகோதரருடன் இணைந்து நடத்துக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின்போது, ஒபாமாவும் தோன்றி பேசினார்.

அப்போது, இருவரும் தங்களுக்கே உரிய நகைச்சுவை மற்றும் சாதாரண பேச்சு வழக்கில், தங்களுக்கு இடையே விவாகரத்து என்பது வெறும் புரளிதான், நாங்கள் நீடித்த, மிகவும் அன்பான வாழ்க்கையை தொடர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்துள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மிச்சல், இவர் எனது கணவர் என்று அன்போடு கூறினார். அப்போது, மிச்சலின் சகோதரர் கிரெய்க், இருவரையும் ஆரத் தழுவினார். உங்கள் இருவரையும் ஒரே அறையில் இன்று பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது என கிரெய்க் கூற, அதற்கு சிரித்தபடி, மிச்சல், ஆமாம், எனக்குத் தெரியும். நாங்கள் விவாகரத்துப் பெறாவிட்டாலும், பெற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள் என்றார்.

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி, 23 பேர் மாயம்

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹா லாங் விரிகுடாவில் 50 பேருடன் சனிக்கிழமை பிற்பகல் சென்ற சுற்றுலாப் படகு திடீரென இடியுடன் கூடிய ... மேலும் பார்க்க

ஈரானில் பேருந்து விபத்தில் 21 பேர் பலி, 34 பேர் காயம்

தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஷிராஸில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் காயமடைந்தனர். உ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், ஹாங்கு மாவட்டத்தின்... மேலும் பார்க்க

நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் நின்றுக்கொண்டு பேசிய செய்தியாளர் ஒருவர், அந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாகிஸ்தான் நாட்டில், கடந்த சில வாரங்களாகவே ... மேலும் பார்க்க

காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேர் சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்!

காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்க... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வான்வழிப் பாதைகள் 2 நாள்களுக்கு மூடல்!

பாகிஸ்தான் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வான்வழிப் பாதைகள் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் விமான நிலைய ஆணையம், அந்நாட்டின், சில தேர்ந்தெடுக்கப்ப... மேலும் பார்க்க