செய்திகள் :

ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் மகா கும்பமேளா: பிரதமர் மோடி

post image

ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் நிறைவடைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ல் தொடங்கி 45 நாள்கள் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வு சிவராத்திரி பெருவிழாவோடு இனிதே நிறைவடைந்துள்ளது. இதில் ஒரு லட்சம் 2 லட்சம் அல்ல.. 65 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இப்படியொரு மாபெரும் ஆன்மிக நிகழ்வு எந்த நாட்டிலும் நடைபெற்றதில்லை.

பொதுவாக கும்பமேளா நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது பூரண கும்பமேளா என்றும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது மகா கும்பமேளா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகம் முழுவதிலுமிருந்து சாதுக்கள், துளவிகள், மடாதிபதிகள் பிரயாக்ராஜில் தங்கி நீராடினர். 45 நாள்களில் முக்கியமான 6 நாள்களில் திரளானோர் வந்து புனித நீராடிச் சென்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினார்கள். இதுதவிர நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமத்தில் புனித வழிபாடுகள் நடத்தினர். பல இளம்பெண்களும் தீட்சை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் மகா கும்பமேளா நிறைவடைந்ததையடுத்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,

ஒற்றுமைக்கான மாபெரும் யாகமான மகா கும்பமேளா நிறைவடைந்துள்ளது. மகா கும்பமேளா 140 கோடி மக்களின் நம்பிக்கை. 45 நாள்களும் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒரே இடத்தில் திரண்டது மிகப்பெரிய விஷயம். எதிர்பார்த்ததை விட அதிகளவிலான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் எடுப்பது விமர்சிக்கத்தக்கதே: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி

இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் இந்திய தூதரக அதிகாரி பதிலளித்தார்.ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் கூட... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு: ராகுல் காந்திக்கு ரயில்வே அமைச்சர் கேள்வி!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு விவகாரம் பர... மேலும் பார்க்க

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லிதான் காரணம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லியே காரணம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவாவில் சமீபகாலமாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து ... மேலும் பார்க்க

பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகிறது: கார்கே

விக்ஸித் பாரத் திட்டத்தால் இந்திய ஏழைகள் பணமின்றி தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.காங்கிரஸ் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கப் பதிவில் கூறியதாவது ``பிரத... மேலும் பார்க்க

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள் என்றும் அவர்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையாகியுள்ளது. ஹரியானா முன்னாள் முதல்... மேலும் பார்க்க

கும்பமேளாவை பயன்படுத்திக்கொண்ட நிறுவனங்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை 45 நாள்கள... மேலும் பார்க்க