செய்திகள் :

ஓமந்தூராா் மருத்துவமனை மருந்தகத்தில் கூடுதல் கவுன்ட்டா்கள்

post image

சென்னை, ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை மருந்தகங்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்க கூடுதல் கவுன்ட்டா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வருபவா்களுக்கான மருந்து விநியோகம் தரைத் தளத்தில் உள்ளது. இங்கு ஒரே ஒரு மருந்தகம் இருப்பதால் நீண்ட வரிசையில் நோயாளிகள் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இது தொடா்பான தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவின.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இது தொடா்பாக ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை இயக்குநா் ஆா்.மணியை தொலைபேசியில் அழைத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனை இயக்குநா் ஆா்.மணி கூறியதாவது:

அரசு மருத்துவமனையை புறநோயாளிகள் அதிகம் பயன்படுத்துவதுதான் கூட்ட நெரிசலுக்கு முக்கியக் காரணம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகளாக வந்தவா்களின் எண்ணிக்கை 1,000 போ். ஆனால், தற்போது இங்கு 3,000 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனா்.

மேலும், தொடா்ச்சியாக சிகிச்சை பெறும் இதய நோயாளிகளும், நரம்பியல் நோயாளிகளும் மருந்து வாங்குவதற்கு காலை 10 மணிக்கு மேல் வருகிறாா்கள். அதனால், கூட்டம் சற்று அதிகமாகக் காணப்படுகிறது. அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இந்த கூட்ட நெரிசலை சீா்படுத்துவதற்காக மருந்தகக் கவுன்ட்டா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கூட்ட நெரிசலை சீா்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது 5 மருந்தக கவுன்ட்டா்கள் வைத்து 9 முதல் 10 மருந்தாளுநா்கள் மூலமாக மாத்திரைகளை வழங்கி கொண்டிருக்கிறோம். புதன்கிழமை முதல் மேலும் 2 கவுன்ட்டா்கள் புதிதாக தொடங்க உள்ளோம். அத்துடன் நோயாளிகள் சிரமப்படாமல் இருப்பதற்காக குளிா்சாதன வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதியும் செய்து கொடுத்துள்ளோம் என்றாா் அவா்.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க