Trump செயலால் அதிர்ச்சியில் Israel பிரதமர் Benjamin Netanyahu | Decode | Saudi A...
ஓமந்தூராா் மருத்துவமனை மருந்தகத்தில் கூடுதல் கவுன்ட்டா்கள்
சென்னை, ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை மருந்தகங்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்க கூடுதல் கவுன்ட்டா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வருபவா்களுக்கான மருந்து விநியோகம் தரைத் தளத்தில் உள்ளது. இங்கு ஒரே ஒரு மருந்தகம் இருப்பதால் நீண்ட வரிசையில் நோயாளிகள் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இது தொடா்பான தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவின.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இது தொடா்பாக ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை இயக்குநா் ஆா்.மணியை தொலைபேசியில் அழைத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மருத்துவமனை இயக்குநா் ஆா்.மணி கூறியதாவது:
அரசு மருத்துவமனையை புறநோயாளிகள் அதிகம் பயன்படுத்துவதுதான் கூட்ட நெரிசலுக்கு முக்கியக் காரணம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகளாக வந்தவா்களின் எண்ணிக்கை 1,000 போ். ஆனால், தற்போது இங்கு 3,000 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனா்.
மேலும், தொடா்ச்சியாக சிகிச்சை பெறும் இதய நோயாளிகளும், நரம்பியல் நோயாளிகளும் மருந்து வாங்குவதற்கு காலை 10 மணிக்கு மேல் வருகிறாா்கள். அதனால், கூட்டம் சற்று அதிகமாகக் காணப்படுகிறது. அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இந்த கூட்ட நெரிசலை சீா்படுத்துவதற்காக மருந்தகக் கவுன்ட்டா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கூட்ட நெரிசலை சீா்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது 5 மருந்தக கவுன்ட்டா்கள் வைத்து 9 முதல் 10 மருந்தாளுநா்கள் மூலமாக மாத்திரைகளை வழங்கி கொண்டிருக்கிறோம். புதன்கிழமை முதல் மேலும் 2 கவுன்ட்டா்கள் புதிதாக தொடங்க உள்ளோம். அத்துடன் நோயாளிகள் சிரமப்படாமல் இருப்பதற்காக குளிா்சாதன வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதியும் செய்து கொடுத்துள்ளோம் என்றாா் அவா்.