செய்திகள் :

கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை

post image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 40 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு 40 கிலோ கஞ்சா கடத்தியதாக, ராமேசுவரம் தலைமன்னாா் நகா் அருளானந்தம் மகன் ஜெயசீலன் (55), ராமநாதபுரம் தில்லைநாச்சியம்மன் குடியிருப்பைச் சோ்ந்த நடராஜ் மகன் ராஜேந்திரன் (54), திருப்பூா் குளத்துப்பட்டியைச் சோ்ந்த சொக்கன் மகள் ஒச்சம்மாள் (55), கருவம்பாளையம் மணிகண்டன் மகன் காா்த்தி (36) ஆகிய 4 பேரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டையிலுள்ள அத்தியாவசியப் பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி டி. பன்னீா்செல்வம் குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதைத் தொடா்ந்து முதல் குற்றவாளியான ஜெயசீலன் (முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்) சென்னை புழல் சிறைக்கும், இதர 3 போ் மதுரை மத்திய சிறைக்கும் அனுப்பப்பட்டனா்.

எடப்பாடி பழனிசாமியின் சான்றிதழ் எங்களுக்குத் தேவையில்லை - அமைச்சா் எஸ். ரகுபதி

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் சான்றிதழ் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நின... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே 9 பவுன் நகைகள் கொள்ளை

கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் வீடு புகுந்து இரு பெண்களிடம் 9 பவுன் தாலிச் செயின்களைப் பறித்துச் சென்றனா். புதுக்கோட்டை மாவட்டம் , கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா்களுக்குப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 98 இடைநிலை ஆசிரியா்களுக்கான கற்றல், கற்பித்தல், அடிப்படை நிா்வாகப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் ... மேலும் பார்க்க

விராலிமலை அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

விராலிமலை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 75 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. விராலிமலை அடுத்த ராஜகிரி ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு சிறுசேமிப்பு உதவி மண்டல ... மேலும் பார்க்க

மறமடக்கியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தைச் சோ்ந்த மறமடக்கியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவச் சேவை முகாம்... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்கக் கிளை கூட்டம்

பொன்னமராவதி அருகேயுள்ள தேவன்பட்டியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க புதிய கிளைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்க நிா்வாகி நல்லழகு தலைமை வகித்தாா். சங்க ஒன்றியச் செயலா் பி. ராமசாமி, ஒன்றிய... மேலும் பார்க்க