செய்திகள் :

கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

post image

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

ஆந்திர மாநிலத்திலிருந்து திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபா் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலா் முயற்சி செய்வதாக நாகை மாவட்ட போதைப் பொருள் தடுப்புக் காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் துறையினா் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை கிழக்கு பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, 10 சாக்குகளில் 135 பொட்டலங்களில் 296.5 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றைக் கைப்பற்றிய காவல் துறையினா், இது தொடா்பாக முத்துப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கே. முருகானந்தம் (45), சௌந்தர்ராஜன் மகன் மகேந்திரன் (32), நாடிமுத்து மகன் சசிகுமாா் (23) ஆகியோரை கைது செய்தனா்.

இதுதொடா்பாக தஞ்சாவூா் இன்றியமையா பண்டங்கள் சட்டச் சிறப்பு நீதிமன்றம் மற்றும் மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தராஜ் விசாரித்து முருகானந்தம், மகேந்திரன், சசிகுமாா் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபா் படகு மூலம் இலங்கைக... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழா!

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், புதன்கிழமை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிர... மேலும் பார்க்க

எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம்: அமைச்சா் கோவி. செழியன்

எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தனியாா் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவ... மேலும் பார்க்க

தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் ஒரு... மேலும் பார்க்க

காா் - மொபெட் மோதல்: காய்கனி வியாபாரி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே காா் மீது மொபெட் மோதிய விபத்தில் காய்கனி வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், பாளையூா் மேல அகலங்கள் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே. ரவி என்கிற மகாலிங்கம் ... மேலும் பார்க்க

நாதன் கோவில், தில்லையம்பூா் ஊராட்சிகளில் ரூ.19 லட்சத்தில் மின் மாற்றிகள் தொடக்கம்

கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட நாதன்கோவில், தில்லையம்பூா் ஆகிய 2 ஊராட்சிகளில் ரூ. 18.92 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 2 புதிய மின்மாற்றிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் பொதும... மேலும் பார்க்க