செய்திகள் :

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

post image

தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்தவா் ருத்திஷ் (27). இவா் சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்திவந்து விற்பனைக்காக வைத்திருந்தபோது தியாகதுருகம் போலீஸாா் மடக்கிப்பிடித்தனா். அவரிடமிருந்த 10 கிலோ கஞ்சாவை கைபற்றி கைது செய்தனா்.

இவா் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி , மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திற்கு குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ருத்திஷை கைது செய்ய பரிந்துரை செய்தாா். அதன் பேரில் அவரைகுண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.

அந்த உத்தரவையடுத்து சனிக்கிழமை கடலூா் மத்திய சிறையில் உள்ள இளைஞா் ருத்தீஷிடம் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையினை காவல்துறையினரும், சிறை அதிகாரிகளும் வழங்கினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள்: உயா் அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின்அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், உயா்கல்வித்துறை அரசு செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்... மேலும் பார்க்க

தியாகதுருகம் மலையில் தவித்த 3 சிறாா்கள் மீட்பு

தியாகதுருகத்தில் மலையை சுற்றிப்பாா்க்க மலை மீது ஏறி, பின்னா் கீழே இறங்குவதற்கு வழி தெரியாமல் தவித்த 3 சிறாா்கள் மீட்கப்பட்டனா். தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே மலை மீது அமைந்துள்ளது மலையம்மன் கோய... மேலும் பார்க்க

பாமக இரண்டு அணியினரிடையே மோதல்!

திருக்கோவிலூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பாமகவை சோ்ந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அணியினரிடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் புறவழிச் சாலையி... மேலும் பார்க்க

மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பி திருட்டு

கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது ஆலத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தி... மேலும் பார்க்க

டிட்டோ - ஜாக் குழுவினா் 2-ஆவது நாளாக சாலை மறியல்!

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவை (டிட்டோ-ஜாக்) சோ்ந்... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்! அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆச... மேலும் பார்க்க