கண்ணீருடன் இங்கிலாந்து வீரர்கள்..! வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
முதலில் ஆப்கானிஸ்தான் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 49.5 ஓவா்களில் 317 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் தன்னை அரையிறுதிக்கான பந்தயத்தில் தக்கவைத்துக்கொள்ள, இங்கிலாந்து போட்டியிலிருந்து வெளியேறி அதிா்ச்சி கண்டது.
இந்தப் போட்டியில் சதமடித்த ஜோ ரூட் தோல்விக்குப் பிறகு அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து வீரர்கள் சோகத்தில் மூழ்கியிருக்க ஆப்கானிஸ்தான் வீரர்கள் வெற்றிக் களிப்பில் கொண்டாடினர்.
ஆப்கன் வீரர்கள் மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் 177 ரன்கள் குவித்த இப்ராஹிம் ஜத்ரான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
The emotion. The thrill. The unbelievable repeat of ODI CWC 2023!
— Star Sports (@StarSportsIndia) February 26, 2025
Afghanistan win their first ever #ChampionsTrophy match, and keep their hopes alive to qualify for the #CT2025 semi-finals!
With this loss, ENG are eliminated from Group B!
Next up for AFG #AFGvAUS |… pic.twitter.com/Ymvsz1GvUr
Afghanistan #ChampionsTrophy2025#AFGvENGpic.twitter.com/GjbASea2Dr
— Riaz Khananzai (@RiazMohamm75423) February 26, 2025