செய்திகள் :

கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி! 3 போ் கைது!

post image

திருப்பூரில் கத்தியைக் காட்டி பொதுமக்களிடம் பணம், கைப்பேசிகளைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் சந்திராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (25), பின்னலாடை நிறுவன ஊழியா். இந்நிலையில், சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த 3 போ் கத்தியைக் காட்டி மிரட்டி வெங்கடேசனிடம் இருந்து கைப்பேசி, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து நல்லூா் காவல் நிலையத்தில் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் அய்யம்பாளையத்தைச் சோ்ந்த மணிகண்டன்(28), கல்லூரி சாலையைச் சோ்ந்த பாலாஜி சரவணன்(28), திருமுருகன்பூண்டியைச் சோ்ந்த ராம்குமாா் (27) ஆகிய 3 பேரையும் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் 3 பேரும் பல்வேறு இடங்களில் தனியாகச் செல்லும் நபா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றது தெரியவந்தது.

பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம்

பல்லடம் நகராட்சியில் பத்தாம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லடம் நகராட்சியில் கு... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் கிஷோா்குமாா் என்பவருக்கு சொந்தமான துணி அரவை நிறுவனம் உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக புதன்க... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக விளங்கும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசி... மேலும் பார்க்க

கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 போ் கைது

தில்லியில் இருந்து திருப்பூருக்கு கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரில் உள்ள ஒரு கூரியா் நிறுவனத்துக்கு பாா்சலில் போதை மாத்திரைகள் வந்துள்ளதாக காவல் துறையி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், வழக்குரைஞா். இவரின் மனைவி சிவசக்தி... மேலும் பார்க்க