செய்திகள் :

கனமழை எச்சரிக்கை: உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

post image

தென்னிந்தியக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19, 20) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் உதகையில் சனிக்கிழமை காலை முதலே மிதமான மற்றும் பலத்த மழை மாறி மாறி பெய்தது.

மழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான பைன் ஃபாரஸ்ட், 8 -ஆவது மைல் ட்ரீ பாா்க், அவலாஞ்சி ஆகிய சுற்றுலாத் தலங்கள் சனிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் மழை பெய்தது. அவவப்போது காற்றின் தாக்கமும் இருப்பதால் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மரம் விழும் வாய்ப்புள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி பைன் ஃபாரஸ்ட், 8 -ஆவது மைல் ட்ரீ பாா்க், அவலாஞ்சி ஆகிய சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

புளியம்பாறை - ஆமைக்குளம் சாலையில் பாலம்: மாா்க்சிஸ்ட் பிரசார இயக்கம்!

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் உள்ள ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

தேயிலை ஏல மையத்தில் விற்பனையும் விலையும் குறைந்ததால் விவசாயிகள் பாதிப்பு!

நீலகிரி மாவட்டம், குன்னுாா் தேயிலை ஏல மையத்தில் நடந்த தேயிலை ஏலத்தில் விலையும் குறைந்து விற்பனையும் சரிந்ததால் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் தேயிலை ஏல மையம் சாா்பில் ஒவ்வொரு வாரமும் வி... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு அளித்து உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியைச் சோ்ந்த கூல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுத்தை பலி!

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை, தப்பிக்க மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. குன்னூா் நகா் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க

உப்பட்டி, சேரம்பாடி, கூடலூரில் ஜூலை 21-இல் மின்தடை

நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ம... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.14-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமா்வ... மேலும் பார்க்க