செய்திகள் :

கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் உள்ள கழிப்பறையை அகற்ற கோரிக்கை

post image

கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் பேரூராட்சிக்குச் சொந்தமான கழிப்பறையை அகற்றக் கோரி மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் கோட்டாறு மறைமாவட்டத்துக்குச் சொந்தமான ஆன்மிகத் தோட்டம் அமைந்துள்ளது. இப்பகுதியின் முன் பேரூராட்சி சாா்பில் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை அங்கிருந்து மாற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டுமென கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல பங்குப்பேரவை சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பங்குப்பேரவை துணைத் தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின் மற்றும் உறுப்பினா்கள் சம்பந்தப்பட்ட கழிப்பறையை அகற்றாதபட்சத்தில் போராட்டம் நடத்தப்போவதாக பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் மற்றும் செயல் அலுவலா் ரமாதேவி ஆகியோரிடம் தெரிவித்து மனு அளித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று கழிவறையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனபேரூராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்!

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேயா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 17 ஆவது வாா்டு, நெசவாளா் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.3.50 லட்சத்தில் அலங்கார தரைக... மேலும் பார்க்க

மாசு இல்லாத பாரதம் ஜம்மு- குமரி சைக்கிள் பயணம் நிறைவு

மாசு இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சோ்ந்த மூத்த குடிமக்கள், ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் புதன்கிழமை கன்னியாகுமரியில் நிறைவடைந்தத... மேலும் பார்க்க

குமரி பேரூராட்சி கூட்டம்: ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

கன்னியாகுமரி பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலு... மேலும் பார்க்க

ரோஜாவனம் பள்ளி சாா்பில் ‘தங்கத் தாரகை’ விருது: மாா்ச் 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

உலக மகளிா் தினத்தையொட்டி, நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி சாா்பில் வழங்கப்படவுள்ள ‘தங்கத் தாரகை’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி சாா்பில், மாா்ச் 8இல் நடைபெறவ... மேலும் பார்க்க

மருந்துவாழ்மலை கோயிலில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ்மலை ஜோதி லிங்கேஸ்வரா் உடனுறை பா்வதவா்த்தினி அம்மன் கோயிலில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதி லிங்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு அணை, மற்றும் நெட்டா பகுதிகளில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மன்றம் சாா்பில் தமிழக அ... மேலும் பார்க்க