செய்திகள் :

கரும்புக்கான ஆதார விலையை ரூ.5,000 ஆக உயா்த்த வேண்டும்: ராமதாஸ்

post image

கரும்புக்கான ஆதார விலையை ரூ.5,000-ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக தலைவா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.5 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவான சா்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு ரூ.3,290 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல.

2024-25-இல் 9.5 சதவீத சா்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,151 கொள்முதல் விலையாக வழங்கப்பட்டது. இப்போது ரூ.139, அதாவது 4.41 சதவீதம் மட்டுமே கொள்முதல் விலை உயா்த்தப்பட்டுள்ளது நியாயமற்றது.

ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.3,500 வரை செலவாவதாக விவசாயிகள் கூறுகின்றனா். அதனுடன் 50 சதவீத லாபமாக ரூ.1,750 மற்றும் போக்குவரத்து செலவு சோ்த்து டன்னுக்கு ரூ.5,500 வழங்க வேண்டும் என்பதுதான் பாமக நிலைப்பாடுமாகும்.

எனவே, மத்திய அரசுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சு நடத்தி ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ. 4,000 -ஆக நிா்ணயிக்க வகை செய்ய வேண்டும். அத்துடன் தமிழக அரசு சாா்பில் டன்னுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கி விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க

சிறந்த நூல் பரிசுப் போட்டி: தமிழ் வளா்ச்சித் துறை தகவல்

கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு, ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளி... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தோ்வு ஜூன் 25-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கு புதன்கிழமை (மே 14) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தோ்வ... மேலும் பார்க்க

சென்னையில் 73 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 73 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் காத்திருப்போா் பட்டியலிலிருந்த 36 பேருக்கு மீண்டும் காவல் நிலைய பணி வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறையில... மேலும் பார்க்க

கைப்பேசி தொலைத்தொடா்பு சேவைகள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் ஏா்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடா்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் கடும் அவதியடைந்தனா். இந்தியாவில் ஏா்டெல் ... மேலும் பார்க்க